ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

இயல்பான அழகு

 


அழகு


இயல்பாய் இருப்பது தான் அழகு . ஈர்ப்பு .

குழந்தைகள் இயல்பாய் சிரிக்கும் போதும் நடந்து கொள்ளும்போதும் அழகுதான் . அதன் இயல்பான அழுகையும் அழகு தான் . 


வேட்டையாடும் சிங்கமும் 

பயந்து ஒடும் மானும் 

படம் எடுத்து ஆடும் பாம்பும் அதன் இயல்பில் அழகாய் இருக்கும் . 



இயல்பில் இருப்பது தான் அழகு . 

இயல்பில் இருப்பது தான் ஈர்ப்பு 

இயல்பில் இருப்பது தான் ஒழுக்கம் 

இயல்பில் இருப்பது தான் சுதந்திரம் 

இயல்பில் இருத்தல் விடுதலை

இயல்பில் இருப்பது தான் சும்மா இருத்தல் . 

இயல்பில் இருப்பது நிகழ் காலத்தில் இருப்பது . 

இயல்பில் இருப்பது தான் சாட்சி தன்மையில் இருத்தல்.

இயல்பொடு முரண்பட கூடாது என்ற புரிதலே ஞானம் . இயல்பொடு ஒத்து போதலே சரணாகதி. 

 

இயல்பில் இருக்க முயற்சி/பயிற்சிகள் எதும் தேவை இல்லை . 

முயற்சிகள் அனைத்தும் இயல்புக்கு முரணானது. 


அக முயற்சிகள் அற்ற நிலையில் நாம் இயல்பில் தான் இருக்கிறோம். 


இயல்பு அனைவருக்கும் ஒன்றானது அல்ல . ஒவ்வொருவரின் இயல்பும் வேறுபட்டு இருக்கும் . 

இயல்பில் செயல்படும் போது நாம் மெய் பொருளின் இயக்காமாய் இருப்போம் . 


இயல்பில் இருக்கும்போது நம் ஆற்றல் 100% வெளிப்படும் . 


இயல்பில் total mind செயல்பாட்டில் இருக்கும் . Concious mind முக்கியத்துவம் இன்றி இருக்கும் .இயல்பில் இருக்கும் போது Concious mind ம் total mind உடன் இணைந்து நிலையில் செயல்படும் .


இயல்பில் இருக்கும் போது கர்மாக்கள் தொடர்வது இல்லை .

திங்கள், 13 ஜூன், 2022

இயற்கை வழங்கிய உணவே நல்லது

 







இயற்கை வழங்கிய உணவுகளே நம் உடலை பாதுகாக்கும்

நாம் எல்லோரும் நோயில்லாமல் வாழ ஆசைப்படுகிறோம். ஆனால் அதிகப்படியான மக்கள் பல நோய்களும் உடல் பலத்துடனும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் நோயில்லாமல் வாழ்ந்தார்கள். அன்று அவர்களுக்கு கிடைத்த உணவுகள் அனைத்துமே உடல் நலத்தை பாதுகாத்து அன்று அவர்களுக்கு இயற்கை வழங்கிய உணவுகள் மட்டும் தான் கிடைத்தது. இன்று இயற்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கான உணவுகளை கண்டுபிடித்துவிட்டார்கள். அதனால் நூற்றுக்கணக்கான நோய்கள் வந்து விட்டது. இன்று நாமும் நோயில்லாமல் வாழ வேண்டுமானால் இயற்கை மருத்துவத்தை நாடவேண்டும் சர்க்கரை நோய் ஆண்மை குறைவு நரம்புத் தளர்ச்சி உடல் பலவீனம் உடல் உஷ்ணம் தம்பதிகளின் உறவு பிரச்சனைகள் பெண்களின் உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் குழந்தை இல்லாமை நோய் குடல் புண் உடல் வலி உடல் பருமன் மற்றும் அனைத்து நோய்களையும் இயற்கை மருத்துவம் குணமாக்குகிறது அது எப்படி என்றால் இயற்கை அன்னை வழங்கும் உடலுக்கு நலம் தரும் உணவு வகைகளை  தினமும் சாப்பிட்டால் எந்த நோயும் வராது


இயற்கை தானாகவே உருவாகியது இயற்கையை யாரும் உருவாக்கவில்லை உருவாக்கவும் முடியாது உருவாக்கினார்கள் என்று சொல்வார்கள் அவை அனைத்தும் கற்பனை கதை பூமியில் பல வகையான உயிரினங்களை படைத்து அவர்களுக்கு தேவையான  உணவுகளையும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொடுத்திருக்கிறது

தேனி வண்ணத்துப்பூச்சி தேன் சிட்டு உயிர்களுக்கு தேன் மட்டுமே உணவு. மண்புழுக்களுக்கு மன் மட்டுமே உணவு. சிங்கம் ,புலி, சிறுத்தை, நரி, ஓநாய் இவைகளுக்கு மாமிசம் மட்டுமே உணவு. ஆடு மான் மாடு யானை குதிரை முயல் போன்றவைகளுக்கு புல் மட்டுமே உணவு இப்படி ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒவ்வொரு வகையில் உணவை இயற்கை வழங்கிக் கொண்டிருக்கிறது.

இயற்கை தத்துவத்தின் படி மனிதர்கள் பூமியில் விளையும் உணவுகளை மட்டும் தான் உண்ண வேண்டும். காய்கள் ,கீரைகள், பழங்கள், தானியங்கள், பயறு வகைகள், தேங்காய் இத்துடன் இன்னும் சில உணவுகளும் உண்டு இவை அனைத்தும் தான் மனித உணவுகள். இந்த உணவுகளைத் தான் பழங்கால மனிதர்கள் சாப்பிட்டு உடல் நலத்துடனும் ஒற்றுமையுடனும் அன்பை பரிமாறி வாழ்ந்தார்கள் மனிதனை மனிதன் நேசித்து வாழ்ந்தான்.

மனித உடலுக்கு நலம் தரும் உணவுகளையும் ஆறு சுவைகள் கொண்ட பல வகை மூலிகைகளையும் நாம் இயற்கை அன்னை அவர்கள் நமக்கு தேவையான அளவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் நாம் தினமும் பயன்படுத்தினால் எல்லாம் நோய்களிலிருந்தும் விடுதலை அடைந்து உடல் நலத்துடனும் உடல் பலத்துடனும் அதிக ஆண்டுகள் வாழலாம் . இன்றைய நாகரிக வாழ்வில் அதிகமானவர்கள் பல வகையான நோய்களும் உடல் பலத்துடனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இன்று உடல் பிரச்சனைகள் எல்லா வயதினருக்கும் இருக்கிறது நோய்கள் உள்ள உடல் நோயில்லா உடலாக மாறவேண்டுமானால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கை உணவு எடுப்பது தான் சாலச் சிறந்தது

இயற்கை என்னும் இறைவன் அவர்கள் மனிதர்களை பூமியில் விளையும் உணவுகளை மட்டுமே உண்ணும் படியாக உடலையும் உள்ளுறுப்புகளையும் வழங்கியிருக்கிறார்கள் பூமியில் விளையும் இயற்கை உணவுகளையும் நாம் சமைத்து உண்ணும் சைவ உணவுகளையும் சரியான முறைப்படி சாப்பிட்டு வாழ வேண்டும்.

மாட்டுப் பால் பால் பொருட்கள் மாமிச வகைகள் மீன் முட்டை கருவாடு இவை அனைத்தும் பூமியில் விளையவில்லை மனித உணவும் இல்லை மேலே சொன்ன உணவுகள் அனைத்தும் வேறு வகையான உயிரினங்களின் உணவுகளாகும்

இயற்கை தத்துவத்தின்படி நலம் தரும் உணவுகளை மட்டும் சாப்பிட்டு என்றும் நோயில்லா உடலுடன் வாழ வேண்டுகிறேன். நன்றி வணக்கம்

வெள்ளி, 10 ஜூன், 2022

துறவறம் எனப்படுவது......


 துறவறம் பற்றி காண்போம்

தீராத குடும்ப பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கு கூறாமல் சன்னியாசியாதல்தான் இது விபரீத முடிவு மட்டுமல்ல. வியர்தனமான அசட்டுத்தனமான முடிவு இதற்குப் பெயர்தான் Escapism.

ராமகிருஷ்ணர் மற்றும் பல மஹான்கள் வாழ்வில் பார்க்காத கஷ்டங்களை அவர்கள் சன்னியாசியாக போகலையே. சவால்களை சந்தித்து அதை ஜெயித்தார்கள் இந்த பீடிகை எதற்கு என பலர் நினைக்கக்கூடும் எல்லாம் காரணமாகத்தான் என்று கேட்கிறீர்களா, கூறுகிறேன்.

ஒரு நாள் நம் யோகிராஜ் இல்லாத வாசிகளுக்கு உபதேசம் செய்து விட்டு சற்று ஓய்வாக இருந்த பொழுது அவரது அணுக்கத் தொண்டர் கௌரி பந்தோ பாத்யாயா தயக்கத்துடன் நெருங்கினார் அவர் தான் பிற்காலத்தில் சேசலானந்த பிரம்மச்சாரி என்று பிரபலமானார் அவருக்கு குடும்ப பிரச்சினையால் யோகா சாதனை புரிவது கஷ்டமாக இருப்பதாக நினைத்தாள் அதனால் இல்லறத்தைத் துறந்து ஓடி விடுவது என முடிவு செய்து கொண்டார் அதற்கு முன்பு குருதேவரிடம் அனுமதி பெற்று சன்னியாசம் பெறுவதே உரிய முறை என்பதால்தான் நெருங்கினார் பணிவாக குருதேவரை எனக்கு ஆன்மீக சாதனைகள் புரிவதற்கு இல்லாத சூழல் ஏற்றதாக இல்லை அதனால் சன்னியாசியாக போய்விடலாம் என நினைக்கிறேன் தாங்கள் தயவுசய்து உத்திரவு அளிக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.

நமது சனாதன சாஸ்திரத்தின்படி சன்னியாசம் என்பது நான்காம் நிலை பிரம்மச்சரியம், கிரகஸ்தாஸ்ரமம், வானப்பிரஸ்தம் பின்புதான் சன்னியாசம். அதாவது சன்னியாசம் என்பது ஞானத்தில் பழுத்து, செழித்து, அழுக்காறு, அவா ,வெகுளி, இன்னாச்சொல் என்ற நிலைகளை கடந்து மனது முழுமையும் முதிர்ச்சியும் பெற்ற பிறகு பெறுகின்ற உன்னத நிலை.

நாம் பலரும் நினைப்பது போல துறவறம் எனில் இல்லத்தை மற்றும் சுற்றத்தை துறந்து கானகம் செல்ல வேண்டும் என்பது அல்ல சுருக்கமாக சொல்லப்போனால் தன்னலத்தை துறந்து மண்ணுலகத்தில் தன்னை எந்த எதிர்பார்ப்பும் இன்றி கிடத்தல் சன்யாசம் ஆகும்.

சன்யாசம் பற்றி அர்த்தசாஸ்திரம் பகவத் கீதை மற்றும் திருக்குறள் போன்ற ஞான சாதனங்கள் என்ன போதிக்கின்றன என்பதை பற்றி சுருக்கமாக மனதில் சிந்தித்துப் பின்புதன் நமது யோகி ராஜரின் ஞானப் பொழிவை பதிவாக கொடுக்கிறேன்.

எனது  சிற்றறிவினை கூர்மைப்படுத்தி வேதங்களிலே சன்யாசம் பற்றி ஏதேனும் கருத்து உள்ளதா. சன்னியாசம் பெற்ற வேதரிஷிகள் சுட்டப்பட்டுள்ளனரா.எனத் தேடித் தேடிப் படித்தேன் என் அறிவிற்கு எட்டியவரை சன்னியாசம் பெற்ற ரிஷிகள் என எவரையும் குறிப்பிடப் பட்டதாகத் தெரியவில்லை ராமன் வனவாசம் சென்று சந்தித்த எல்லா ரிஷிகளும் இல்லறம் நடத்தி அவர்களாக சுற்றம் சூழ தான் இருந்திருக்கிறார்கள்.

பரத்வாஜர் ஆக இருக்கட்டும் மற்றும் அத்திரி என்ற அளவிலே கருதப்பட்டதால் கொண்டதாகவோ தெரியவில்லை மாறாக அவர்கள் அனைவரும் இல்வாழ்க்கையை சிறந்த நல்லறமாக கடை பிடித்திருக்கிறார்கள் அதன் மூலம் இறை அனுபூதி உற்று அதை சகலருக்கும் அருள் இருக்கிறார்கள்.

ரிக் வேதம் நான்காம் மண்டலத்தில் அருளப்பட்ட மந்திரங்கள் பெரும்பான்மையானவை கௌதம முனிவருக்கு உபதேசிக்க பட்டது என்றும் சபிதா குறித்து அருளப்பட்ட மந்திரங்களை முனிவரின் மகன்  

ஷ்யாவஷல முனி வருக்கு  அருளப்பட்டது என்றும் மண்டலம் 765 மந்திரங்கள் இவை இந்திரனுக்கு அளிக்கப்பட்ட விளக்கங்கள் அனைத்தும் பரத்வாஜ முனிவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சொல்லப்பட்டது என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது வேதங்களும் அதன் சாரமாகிய உபநிஷதங்களும் பரமாத்மனால் ரிஷி களுக்கும் இறை அனுபூதி பெற்றவர்களுக்கும் வெளியிடப்பட்டது சொல்லப்பட்டிருக்கின்றன அன்றி துறவி என்ற பிரிவினருக்கு சொல்லப்பட்டது என கூறப்படவில்லை

பகவத் கீதையின் ஐந்தாம் அத்தியாயத்தில் சன்னியாசம் பற்றி பேசப்படுகிறது ஆனால் அந்த சன்னியாசம் இல்லறத்தை துறந்து கானகத்திற்கு வேறு புதிய கண்காணாத இடத்திற்கு செல்வதை பற்றியல்ல கருமம் புரியாது இறை நிலையிலே மட்டும் நினைவுகளை குவிக்கின்ற நிலை ஆனால் பகவத் கீதை உயர்ந்தது என்று ஏற்றுக் கொள்ளவில்லை கர்ம யோகத்தை தான் உயர்ந்தது என சொல்லியிருக்கிறார் அதற்குண்டான உபதேசங்களை சுருக்கமாக காணலாம்.

கர்ம சன்னியாச சாங்கியம் என்ற சொற்களிலும் பகவத் கீதையில் பயன்படுத்தப்படுகிறது கர்ம யோகம் யோகம் என்ற சொல்லிலும் பயன்படுத்தப்படுகிறது கர்ம சந்நியாச யோகம் ஆகிய இரண்டும் சிறப்பைத் தரும் எனினும் கரும சன்னியாச அதைவிட  கர்ம யோகமே மேலானது வெறுப்பும் விருப்பும் இல்லாதவன் நித்ய சன்னியாசி எனப்படுகிறான்

கர்ம யோகம் புரியாது கர்ம சன்னியாச புரிதல் எளிதன்று கர்ம யோகம் செய்யும் முனிவனும் விரைவில் பிரம்மத்தை அடைகிறான் என்கிறார் கண்ணபிரான் யோகம் என்றால் என்னவென்று சந்திப்பின் லாபம் நஷ்டம் சுகம் துக்கம் வெற்றி தோல்வி போன்ற இருமைகளில் தன்னை  இழக்காது நடுநிலையில் விளங்கி நித்திய சந்தோஷமாய் இருப்பவனே யோகி எனப்படுவான் அவர்கள் தங்களை மையமாக வைத்து எச்செயலையும் செய்யமாட்டார்கள் தர்மத்தையே குறிக்கோளாகக் கொண்டு கருமம் புரிவார்கள் அப்பேர்பட்ட யோகிகள் கருமம் புரியணும் கர்ம பந்தம் அவர்களை தீண்டாது

பின்பு கண்ணபிரான் சாங்கிய யோகத்தில் 48வது ஸ்லோகத்தில் தனஞ்சய யோகத்தில் நிலைபெற்று பற்றற்று வெற்றி தோல்விகளை சமமாக கொண்டு கருமம் செய் நடுநிலையே யோகம்  என சொல்லப்படுகிறது என்கிறார் இதிலிருந்து பகவத் கீதையிலும் துன்பங்களுக்கும் குழப்பங்களுக்கும் அன்றே இல்லறத்தை துறந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒரு மார்க்கமாக துறவறத்தை கைக்கொள்ள அங்கீகாரம் அளிக்கப்பட்ட தெரியவில்லை தர்மத்தை மையமாகக்கொண்டு உறங்காமல் சுருங்காமல் பணியாற்றுதல் எல்லா ஜீவர்களின் கடமை என பிரகடனம் செய்கிறார்கள் தாயின் அனுமதி பெற்று சன்னியாசம் பெற்ற ஆதிசங்கரர் இறுதிவரை ஞான வேள்வி நடத்திக் கொண்டுதானே இருந்தார் நமது பரமாச்சாரியாரும் ரமணமகரிஷியூம் யோகிராஜர் மகாயரும் பரமஹம்சரும் இறுதிவரை பல இடங்களில் பொது வாழ்விலிருந்து தப்பிக்க நினைக்கவே இல்லையே

கிமு மூன்றாம் நூற்றாண்டில் சாணக்கியர் ஆல் இயற்றப்பட்ட அர்த்தசாஸ்திரத்தில் குழப்பங்களுக்கும் இல்லறத்தை எழும் பிரச்சினைகளுக்கும் பயந்து ஓடுகிற துறவு நிலை பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என காணலாம்.

மனக் குழப்பத்தில் இருந்து விடுபட பயன்படும் மனைவிக்கும் அவனுக்கும் பிறந்த பிள்ளைகளுக்கும் வாழ்க்கைக்கு வசதிகளை செய்து கொடுக்காமல் சன்னியாசம் செல்பவனுக்கு அதிக வட்டி அபராதமாக 250 பொற்காசுகள் அபராதம் விதிக்கப்படும் பெண்ணுக்கு சந்நியாசம் கொடுத்து வீட்டைவிட்டு வெளியேற்ற பவனுக்கும் இதேபோன்று அபராதம் விதிக்கவேண்டும் இல்லற வாழ்விற்கு தகுதி இழந்த வயதானவன் நீதிபதிகளின் அனுமதியின் பேரில் சந்நியாசம் மேற்கொள்ளலாம் அன்றி வேறு வகையில் சன்னியாசம் மேற்கொள்ளக்கூடாது .

வானப்பிரஸ்தர்களை தவிர மற்ற ஆசைகள் புத்த துறவிகள் சமணர்கள் புதிதாக ஏற்படுத்தப்படும் கிராமங்களிலோ எல்லோரும் ஒரு காரணத்திற்காக ஓரிடத்தில் சேர்ந்திருக்கும் சமுதாயத்திலும் வசிக்கக் கூடாது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் தீவிர சனாதன கௌடில்யர் என்னும் சாணக்கியரின் கட்டளைப்படி மௌரிய சாம்ராஜ்யத்தின் அரசகட்டளை இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நமது இந்துதர்மம் வேதங்களே அன்றே சாத்திரங்களும் தப்பித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆதிசங்கரரும் கோவிந்ததில் கூறியிருக்கிறார் ஒருவன் சித்தரித்து ரிஷி போல் வேஷம் போடுகிறான் ஒருவன் மொட்டை அடித்துக் கொள்கிறான் மற்றொருவன் தலை மயிரைப் பிடுங்கி எறிகிற இன்னொருவன் காஷாயத்தை அலங்காரமாக உடுத்திய எல்லோரையும் மயங்க செய்கிறான் இந்த மூடர்கள் கண்ணிருந்தும் உலகம் பொய்யான அழிவதில்லை இதிலிருந்து மகான்கள் தப்பித்துக் கொள்வதற்காக துறவி வேஷம் போட்டு ஓடுபவர்களை ஏற்றுக் கொள்வதில்லை என்பதுதான் வாருங்கள் திருவள்ளுவரை தரிசனம் செய்துவிட்டு யோகியாரின் உபதேச மாலை அனுபவிக்கலாம் வள்ளுவப் பெருந்தகை துறவறத்தை இதோடு ஒப்பிடுகையில் நற்றன்று என்ற அறிவுரையை கூறுகிறார் இல்வாழ்க்கை  என்ற அதிகாரத்தில்

என்றும் அறஇயல்பினால் இல்லற வாழ்க்கை நடத்துபவன் என்பவன் பிற வழிகளில் வாழ முயற்சி செய்வார் எல்லோரிலும் மேன்மை உடையவன் என்றும் கூறுவர்.

மேலும் மற்றொரு குறளில் மனைவியோடு கூடிய சிறந்த வாழ்க்கை நடத்துபவன் அறிஞர்கள் சான்றோர்கள் மற்றும் துறவிகள் ஆகிய அனைவருக்கும் உற்ற துணை என கூறுவார் மேலும் தவம் என்ற தலைப்பில் தவம் செய்தல் என்பது முன் பிறவியில் நல்வினை செய்தார் கே அமையும் அந்த நல்வினை இல்லாதவன் தவத்தை மேற் கொள்வது வீண் முயற்சியே என்பார் மேலும் துறவு என்ற தலைப்பிலே அதிகாரத்தின் நிறைய குரலாக துறை வேனில் பற்றில்லாத இறைவன் மேல் பற்றி கொள்ளுதல் ஆகும் என்ற இதைத்தான் பாபாஜி மகாசயர் மற்றும் எல்லா மகான்களும் செய்தார்கள் இதுதான் உண்மை துறவறம் மேலே விவரித்துள்ள அத்தனை விஷயங்களும் அறிந்த ஞான விருட்சம் நமது யோகிராஜ்ர்  தான்  . நம் உள்ளத்தே நமக்கு வரும் நிகழ்ச்சி அப்படியே பதிவு செய்கிறேன் முதலில் அனைத்தையும் செவிமடுத்த மகாசாயர் சிரித்தார் பிறகு சொன்னார் என்னை கௌரி உன்னுடைய பூணூலின் பலம் அதிகமாக ?அன்றி  சடையின் பலம் அதிகமா? நீ சாதுவை போல உன்னையே விளம்பரப்படுத்திக் கொள்ள பார்க்கிறாயா? ஜனங்கள் முளைத்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று விரும்புகிறாயா? இதோ பார் காவி உடை அணிவதால் ஜனங்கள் சாதுவாகி விடலாம் என்றால் கழுதை குதிரை கூட சாதுவாகிவடலாம் அவை நிறமும் காவி நிறம் தான் ஆனால் அவை சாதுக்கள் என அழைக்கப்படுவதில்லை இதைப்போன்ற பைத்தியக்கார எண்ணத்தை எல்லாம் விட்டு விட்டு சுயமாக எவ்வளவு சம்பாதிக்கிறோம் அதை வைத்து வாழ்க்கையை நிர்வாகம் செய் மற்றவர்களிடம் தானம் பெற்ற மனம் என்னும் யாத்திரையை நிர்வாகம் செய்யாதே என்றார்.

இந்த புத்திமதி அந்த சிற்பியை இருக்கு மட்டும்தானா அந்த ஞான உபதேசம் எல்லோருக்கும் தான் சொல்வது சரிதானே உன் பாத பங்கஜம் தேகிஎன்றே சரணடைந்தேன் அருள்பரிவாய்.....

ஞாயிறு, 5 ஜூன், 2022

ஜகத்குரு ஸ்ரீ சங்கர சரிதம்

 








பிறவியும் பால பருவம்

ஸ்ரீமத் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கோரினார் எப்பொழுது இவ்வுலகில் தர்மத்துக்கு சரிவு ஏற்படுகிறதோ அதர்மம் தலை தூக்குகிறதோ நான் அவதரிக்கிறேன் என்று கூறினார்.

பாரதத்தில் அப்படியும் ஒரு காலம் ஏற்பட்டது. ஒருவர் பின் ஒருவராக வெளிநாட்டார் புண்ணிய பூமியை தாக்கினார்கள். வேதத்திற்கு புறம்பான சமயங்கள் பரவின. சனாதன தர்மம் நளிவுர துவங்கியது. தேவர்கள் கூட பீதியடைந்து போயினர். வைதீக தர்மத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டியிருந்தது. சனாதன தர்மத்தை விழிப்படைய செய்ய வேண்டியது அவசியமாயிற்று. தேவர்கள் எல்லோரும் ஸ்ரீ பரமேஸ்வர சரணடைந்து பாரத பூமியில் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டினர். கருணைக்கடலான ஸ்ரீ பரமேஸ்வரர் அவர்களைத் தேற்றி தானே அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுவது உறுதியளித்தார். தேவர்களும் தெளிவுற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

பச்சை பசேலென்ற கேரள நாட்டின் புண்ணிய பூமியில் பூர்ணா நதிக்கரையில் புனித கரையில் காலடி என்ற பெயர் கொண்ட அழகான கிராமம் அமைந்துள்ளது.

ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றுக்கு சரியான சான்றாக கருதப்படும் சங்கர விஜயத்தில் அவர்கள் பிறவி தளமான காலடியை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளதை பார்ப்போம்.

கருணைக் கடலும் காமதேவனின் எதிரான பகவான் ஸ்ரீ பரமேஸ்வரர் கேரளா நாட்டின் ஸ்ரீமத் விருஷ சலேஸ்வரத்தில் பூர்ணா நதியில் புனித கரையில் ஜோதிர் லிங்க வடிவில் சுயம்புவாக அவதரித்தார்.

பக்த ஜனங்கள் இலக்கங்களை மற்றும் பகவான் ஸ்ரீ பரமேஸ்வரன் உடைய கருணையினால் ஆறு விதமான நீதி உபாதைகளிலிருந்து விடுபட்ட அதிர முனியம்மா காலடி என்னும் பெயருடைய கிராமம் ஒன்று கோவிலின் அருகே விளங்கியது.

Mysterious infection affecting children's liver: reported to be spreading rapidly




 

Mysterious infection affecting children's liver: reported to be spreading rapidly


Symptoms 

Symptoms such as redness of the eyes, sore throat or diarrhea are usually caused by a viral infection. Scientists in the UK have blamed adenoviruses for this.

A few infections are unavoidable. In particular, growing children are susceptible to a variety of infections. In particular, a disease called hepatitis can affect developing children. There is no risk of this damage being mild. However, there is currently a serious liver infection affecting children in the UK. It has been reported that it is spreading rapidly not only in European countries but also in the United States.

Inflammatory disease of the liver in children:

Doctors change health experts, the disease that mysteriously affects the liver was first identified in children. Since January, 74 children have been seriously affected by hepatitis, British officials say. It has also been confirmed that the infection is not caused by viruses, which usually cause inflammation of the liver. Therefore, scientists and doctors are investigating whether the cause of this infection is the environment or viruses such as Govit-19

Common symptoms of a viral infection are:

Symptoms such as redness of the eyes, sore throat or diarrhea are usually caused by a viral infection. Scientists in the UK have blamed adenoviruses for this. U.S. officials say nine children with severe hepatitis in Alabama have tested positive for adenovirus.

Do not assume that a child will have liver damage if they have adenovirus. Although adenovirus infection is on the rise in the UK, it is not yet known what link it has to the risk of hepatitis. The World Health Organization says this requires genetic testing.


வியாழன், 17 மார்ச், 2022

பிரச்சனையை எதிர்கொள்ளும் விதம்

 








பிரச்சினையை எதிர்கொள்வது எப்படி?

ஒரு நாளும் உங்களால் உங்கள் பிரச்சினையை நிரந்தரமாகத் தள்ளிவைக்க முடியாது.

பிரச்சனையோடு சண்டை போடும் அந்த முயற்சியில் நீங்கள் எப்போதும் உங்கள் பிரச்சனைக்கு அருகிலேயே இருப்பீர்கள்.

இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் ஓர் உண்மை புரியும்.

பிரச்சனையை உருவாக்கிய அதே மனம்தான் பிரச்சனையை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

அது எப்படிச் சாத்தியமாகும்? உங்களை நீங்களே தூக்கிக் கொள்ள முடியுமா? கையைக் கட்டிக்கொண்டு கொஞ்சதூரம் குதிக்கலாம்.

ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லை. உங்களை நீங்களே தூக்கிக் கொள்ளும் முயற்சி கேலிக் கூத்தில் தான் முடியும்.

நீங்கள் மீண்டும் அதே பூமியில் தான் விழுவீர்கள்.

நாய் தன் வாலைத் தானே கவ்வ முயற்சிப்பதை போன்றது உங்கள் செயல்.

அதனால் ஒன்றும் செய்யாமல் உன்னிப்பாகக் கவனியுங்கள்.

போகப்போக ஒரு பற்றின்மை உண்டாகும். அந்தப் பற்றின்மையில் எல்லாம் அழிந்துவிடும்.

ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருங்கள்.

இருப்பு நிலையை அனுபவியுங்கள்.

நடக்கும் வேடிக்கையைக் கவனியுங்கள்.

இந்த மனிதனுக்கு நம் மேல் அக்கறை இல்லை என்று உங்கள் பிரச்சனை புரிந்துகொள்ளும்.

அதன்பின் அது விலகிச் சென்றுவிடும்.

அழையாத விருந்தாளி வீட்டிற்கு வந்தால் வீட்டுக்காரர் என்ன செய்ய வேண்டும்?

ஒன்றும் செய்யக்கூடாது. 

வா என்று வரவேற்கக் கூடாது. 

முகம் கொடுத்துப் பேசக்கூடாது.

ஒன்றுமே செய்யாமல் அந்த வேண்டாத விருந்தாளியை முறைத்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும்.

எவ்வளவு நேரம்தான் அந்த விருந்தாளியால் தாக்குப்பிடிக்க முடியும் சொல்லுங்கள்?

அவர் வெறுத்துப்போய் வெளியேறி விடுவார்.

அதை விட்டு விட்டு அவரைப் போ என்று துரத்தினால், அவருடன் சண்டை போட்டால் அவரும் பதிலுக்கு சண்டை போடுவார்.

வாக்குவாதம் தொடரும். அவர் நீண்ட காலம் உங்கள் வீட்டிலேயே தங்கி இருப்பார்.

 நீங்கள் தேவையில்லாத மன அழுத்தத்தில் உழன்று கொண்டிருப்பீர்கள்.

உங்கள் மனதில் தோன்றும் ஒவ்வோர் எண்ணமும் ஓர் அழையாத விருந்தாளிதான்.

உங்கள் மனம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு வேண்டாத விருந்தாளிதான்.

அதை எதிர்க்காதீர்கள். அமைதியாக எதுவும் செய்யாமல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த பிரச்சனையை முறைத்துப் பார்த்தபடி இருங்கள். வந்த பிரச்சனை தன்னால் போய்விடும்.

வியாழன், 24 பிப்ரவரி, 2022

ஆன்மீகம்




தியானத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்

தியானம் என்றால் என்ன?

நீங்கள் மனதாலோ அல்லது உடலாலும் எதுவும் செய்யாமல் எல்லா நடவடிக்கைகளும் முடிந்த நிலையில் நீங்கள் வெறுமனே, வெறும் உணர்வாய், சாட்சியாய் இருப்பதுதான் ,தியானம் எனப்படுவது. நீங்கள் அதற்காக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இவைகளை நன்றாக புரிந்து கொண்டாலே போதும்.

எப்பொழுது உங்களுக்கு ஓய்வு கிடைக்கிறதோ, அப்பொழுது உங்களது எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டு நீங்கள் வெறும் உள் உணர்வாய் இருங்கள். நினைப்பது அடுத்த ஒன்றின் மேல் கவனம் வைப்பது மற்றும் ஆழ்ந்த சிந்தனை அனைத்தும், அந்த நடவடிக்கைகளில் ஒன்றுதான். இவைகளை விடுத்து ஒரு சில வினாடிகள் ஆவது நீங்கள் உங்கள் உள் மையத்தில் இருந்தால், மிகவும் ஓய்வு தன்மையில் இருந்தால், அதுவே தியானம் ஆகிறது .அதை அடைவது எப்படி என்று புரிந்து கொண்டால் அதில் நீங்கள் விரும்பியவாறு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்க முடியும் உங்களால் ஏன் ,அதில் 24 மணி நேரமும் இருக்கவும் முடியும். 

நீங்கள் அதில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருக்க முடிந்தால், அந்த பாதையை சரியாக புரிந்து கொண்டால், நீங்கள் உங்கள் விருப்பப்படி அதிலிருந்து பிரக்ஞையோடு வெளியே வந்து, பல காரியங்களை செய்யலாம். ஆனால் உங்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது. இந்த நிலையில் இரண்டாவது நிலையாகும் முதலில்,  பிரக்ஞை

நிலையை, விழிப்பு நிலையை பூர்ணமாக அடைதல் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்து அதில் இருந்து வெளியே வந்து சில காரியங்களை எப்படி நடத்துவது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, தரையை சுத்தம் செய்யும் பொழுது, நீரில் குளிக்கும்போது நீங்கள் உங்கள் மனநிலையில் இருந்து நழுவாமல், இவைகளை செய்ய முடியும் பிரச்சனை உள்ள செயல்களில் அதே நிலையில் ஈடுபடமுடியும்.

                                       தொடரும்...


ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

தினம் ஒரு முத்திரை


 *தினம் ஒரு முத்திரை*


*ருத்ர முத்திரை*


சிவபெருமானுக்கு ருத்ரன் என்ற பெயருண்டு. சிவபெரு மானின்
கண்களிலிருந்து தோன்றியது ருத்ராக்ஷம். அக்ஷம் என்றால் கண்,
நல்ல ருத்திராக்ஷத்தை உரைத்துப் பார்த்தால் பசும்பொன்னின் மாற்று
இருக்குமென்று கூறுவார்கள். ருத்ராக்ஷம் அணிபவரை தீயவை
மற்றும் நோய் நொடிகள் அணுகா.
சிவபெருமானைப் பற்றிய மந்திரம் 'ருத்ரம்' எனப்படும். உடல் ஒரு
போக்கிலும் மனம் ஒரு போக்கிலும் செல்ல முடியாது. இரண்டு
குவிந்த நிலையில் இருக்க வேண்டும்.ட அவ்வாறு இல்லாவிட்டால்,
மன இறுக்கம், மனக் குழப்பம், மன அழுத்தம், தெளிவற்ற சிந்தனை,
முரண்பாடான செயல்பாடுகள் ஆகியவை ஏற்படும்.
நம் உடலில் சக்தி, வாயுக்கள், சக்கரங்கள் உள்ளன. பஞ்சபூதங்களும்
குவிந்திருந்தால் சமநிலையில் இருக்கும். இதனால், உடலும் மனமும்
சமநிலையில் இருக்கும்.
பூமி என்பது தாயாக உள்ளது. அதனால் அன்னை பூமி, தாய் நாடு
என்றெல்லாம் கூறுகிறோம். இந்தப் பூமி என்ற பஞ்சபூதம்
தூண்டப்பட்டால், உடல் சமநிலைப் படும்.
சோலார் நரம்புக் குவியல்கள்
சுவாதிஸ்டானம், மணிபூரகம் ஆகிய ஆதாரச் சக்கரங்களுடன் இந்த

நரம்புக் குவியல்கள் இணைந்துள்ளன. நமது வயிற்றுப்ட பகுதியில்
உள்ளே இருக்கும் இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், கணையம்,ட
சிறுநீரகங்கள் ஆகிய முக்கிய உறுப்புகள் இந்த நரம்புக் குவியலின்
கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. இந்த சுவாதிஸ்டானம்,
மணிபூரகச் சக்கரம் இரண்டும் சரிவரச் செயல்படா விட்டால், நரம்பு
கள் பாதிக்கப்பட்டு உள் உறுப்புகள் செயலிழந்துபோகும் வாய்ப்பு
உள்ளது.இந்த ருத்ர முத்திரையைச் செய்யும்போது சோலார் நரம்புக் குவியல்கள்
மற்றும் அதை இயக்கும் மணிபூரகச் சக்கரம் இரண்டும் தூண்டிவிடப்
படுகின்றன.
*செய்முறை*
கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல் ஆகிய மூன்று
விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.
நடு விரலும் சுண்டு விரலும் நேராக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில்
இரண்டு கைகளிலும் செய்யலாம்.
இந்த முத்திரையை பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து
செய்யலாம். இரண்டு கைகளிலும் ஒரே நேரம் ஐந்து முதல் பத்து
நிமிடங்கள் செய்யலாம்.

*பலன்கள்*

1. ரத்த ஓட்டம் சீராகும்.

2. தூய சிந்தனைகள் ஏற்படும்.

3. கண் பார்வைக் குறைபாடு குணமாகும்.

4. சுவாசம் சீர்படும்.

5. இதய வால்வில் உள்ள அடைப்புகள் நீங்கும்.

6. கவனச் சிதறல் ஏற்படாது.

7. பஞ்சபூதங்கள் அனைத்தும் உறுதியாகி சமப்படும்.

8. மண்ணீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் நன்கு செயல்படும்.

9. உயிர் சக்தி அதிகரிக்கும்.

10. தலைவலி, தலைச் சுற்றல் நீங்கும்.

11, ஜீரண சக்தி ஏற்படும்.

12. குடல் இறக்கம், மூலம், கர்ப்பப்பை கோளாறுகள் அகலும்.


சனி, 19 பிப்ரவரி, 2022

அன்பின் வழி

 ஆன்மீகம்- குரு


ஆன்மீகம் எல்லோருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் குழப்பத்தை தவிர்க்க, ஒருவன் தான் தேர்ந்தெடுத்த ஆன்மீகப் பாதையை முழுமையாக மதிக்க வேண்டும். உதாரணத்திற்காக, உணவை எடுத்துக்கொள்ளுங்கள் , பல நாடுகளில் அதன் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப உணவு வகை வெவ்வேறாக இருந்தாலும் அதனை உண்ணும் மக்களுக்கு ஒரே இலக்கு உயிர் வாழ்வதற்கும், வயிற்றின் பசியை பூர்த்தி செய்யவும் உணவு தேவையாகும். இதுபோலவே ஆன்மீகத்தை பலவகைகளில் பின்பற்றலாம். ஆனால் ஆன்மீகத்தின் பாதையில் செல்லும் ஒவ்வொருவருக்கும் முடிவான இலக்கு ஒன்றே ஆகும். கடவுளை அடைய, சில பூஜைகளை செய்ய விரும்புவார்கள். சிலர் பக்தி பாடல்களை (பஜனைகளை) விரும்புவார்கள். சிலருக்கு யோகா, சிலருக்கு தியானம் இவற்றில் எந்தப் பாதை சரியானது அல்லது இவற்றில் எது மிகத் தவறானது என்று ஒருவன் கேட்கலாம். எல்லா பாதைகளும் சரியானதே. உன்னுடைய மனது எதை விரும்புகிறதோ, அந்தப் பாதையின் வழியில் செல். சில நேரங்களில், பலர் தங்களுடைய குருவிடம் சென்று அவர் காண்பிக்கும் பாதையை பின்பற்றுவர்.
ஆனால் ,வேறொரு குரு கிடைத்து விட்டால், முதல் குருவை விட்டு விட்டு அவரிடம் செல்வார்கள். குருவை அடிக்கடி மாற்றுவதால் பல குழப்பங்கள் நேர வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் எந்த வகையிலும் முன்னேற்றம் காண முடியாது. மனதில் சலனம் ஏற்படுகிறது. ஒரு குருவிடம் இருந்து வேறு ஒரு குருவிடம் தாவக்கூடாது. மற்றும் ஒரு குருவோடு மற்றொரு குருவை ஒப்பிடக்கூடாது. மற்றொரு குரு வந்தால் அவரிடமிருந்து ஆசி பெறுங்கள்.அவருடைய போதனைகளை உங்களுடைய குரு கூறுவது போல நினைத்து கேளுங்கள். அவரிடம் உங்களுடைய குருவை காண வேண்டும். இவ்வாறு செய்தால் குழப்பம் நிலவாது. உங்கள் குருவை மற்ற குருவில் பார்த்தால் அவருடைய போதனைகளையும் சரியான வழியில் எடுத்து, ஆன்மீகத்தின் வழியில் செல்ல முடியும்.
இவ்வுலகில் அனைத்து குருவும் நல்லவர்கள்.எந்தப் பாதையிலும் தவறில்லை. எல்லா குருக்களும் கல்கி அவதாரமாக (ஒரு தெய்வீக சக்தி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்து மனித உருவில் வாழ்கிறது) வந்து வாழ்க்கையின் உண்மைகளையும், கொள்கைகளையும் கற்றுக்கொடுக்க வந்துள்ளனர்.மகான்களின் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும்,அனைத்து பாதைகளும் ஒரே இலக்கை போய் எட்டுகிறது -"கடவுள்" ஆன்மீகத்தில் தேர்ந்தெடுக்கும் பாதையில் செல்லவேண்டும். பக்தியை தவறாக உபயோகிக்க கூடாது.
மற்ற குருக்களைப் பற்றி தவறாக பேசக்கூடாது. ஒவ்வொரு குருவும் பிரத்தியேகமானவர்.நாம் வழிபடும் கடவுள் குருவின் வடிவத்தில் வருகிறார். ஆகையால், குருவை பற்றி அவதூறாக பேசினால் கடவுளை அவதூராக பேசுவதற்கு ஒப்பாகும். ஆன்மீகத்தின் பாதையில் அமைதிக்காகவும், சந்தோஷத்திற்காக செல்கிறோம். பல குருக்களையும் கடவுளின் பல்வேறு வடிவங்களாக பார்க்க வேண்டும். நன்மை வெவ்வேறு வழிகளில் அவர்கள் வழி நடத்தினாலும் ஒரே இலக்கை தான் வந்தடையும. மின்சார விளக்கு பலவிதமான சக்திகளில் வரும். ஆனால் அதில் பயன்படுத்தும் மின்சாரம் எல்லாவற்றிலும் ஒரே விதமாக இருக்கும்.
     எல்லோரும் தான் விருப்பத்திற்கு ஏற்ப குருவை தேர்ந்தெடுத்து அவரது போதனைகளை பின்பற்ற வேண்டும். நீ விரும்பிய இந்தப் பாதையை கடைசிவரை பின்பற்றி வாழவேண்டும். உன்னுடைய நண்பர்கள் கூறுவதை கேட்காமல், உன் மனதில் ஒலிக்கும் குரலை கேட்டு அதன்படி நடந்து உனது குருவின் பாதையில் செல்ல வேண்டும். அப்போதுதான் ஆன்மீகத்தின் பாதையில் முன்னேற முடியும். 
எல்லோரும் தான் விரும்பிய ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து, இறுதிவரை அதனைப் பின்பற்றி, கடவுளாகிய இலக்கை அடைய குருவின் அருளை பெற வேண்டும்.
          🙏நன்றி நன்றி நன்றி🙏

Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom

 Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom Consuming garlic on an empty stomach is believed to offer numerous health be...