வியாழன், 17 மார்ச், 2022

பிரச்சனையை எதிர்கொள்ளும் விதம்

 








பிரச்சினையை எதிர்கொள்வது எப்படி?

ஒரு நாளும் உங்களால் உங்கள் பிரச்சினையை நிரந்தரமாகத் தள்ளிவைக்க முடியாது.

பிரச்சனையோடு சண்டை போடும் அந்த முயற்சியில் நீங்கள் எப்போதும் உங்கள் பிரச்சனைக்கு அருகிலேயே இருப்பீர்கள்.

இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் ஓர் உண்மை புரியும்.

பிரச்சனையை உருவாக்கிய அதே மனம்தான் பிரச்சனையை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

அது எப்படிச் சாத்தியமாகும்? உங்களை நீங்களே தூக்கிக் கொள்ள முடியுமா? கையைக் கட்டிக்கொண்டு கொஞ்சதூரம் குதிக்கலாம்.

ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லை. உங்களை நீங்களே தூக்கிக் கொள்ளும் முயற்சி கேலிக் கூத்தில் தான் முடியும்.

நீங்கள் மீண்டும் அதே பூமியில் தான் விழுவீர்கள்.

நாய் தன் வாலைத் தானே கவ்வ முயற்சிப்பதை போன்றது உங்கள் செயல்.

அதனால் ஒன்றும் செய்யாமல் உன்னிப்பாகக் கவனியுங்கள்.

போகப்போக ஒரு பற்றின்மை உண்டாகும். அந்தப் பற்றின்மையில் எல்லாம் அழிந்துவிடும்.

ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருங்கள்.

இருப்பு நிலையை அனுபவியுங்கள்.

நடக்கும் வேடிக்கையைக் கவனியுங்கள்.

இந்த மனிதனுக்கு நம் மேல் அக்கறை இல்லை என்று உங்கள் பிரச்சனை புரிந்துகொள்ளும்.

அதன்பின் அது விலகிச் சென்றுவிடும்.

அழையாத விருந்தாளி வீட்டிற்கு வந்தால் வீட்டுக்காரர் என்ன செய்ய வேண்டும்?

ஒன்றும் செய்யக்கூடாது. 

வா என்று வரவேற்கக் கூடாது. 

முகம் கொடுத்துப் பேசக்கூடாது.

ஒன்றுமே செய்யாமல் அந்த வேண்டாத விருந்தாளியை முறைத்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும்.

எவ்வளவு நேரம்தான் அந்த விருந்தாளியால் தாக்குப்பிடிக்க முடியும் சொல்லுங்கள்?

அவர் வெறுத்துப்போய் வெளியேறி விடுவார்.

அதை விட்டு விட்டு அவரைப் போ என்று துரத்தினால், அவருடன் சண்டை போட்டால் அவரும் பதிலுக்கு சண்டை போடுவார்.

வாக்குவாதம் தொடரும். அவர் நீண்ட காலம் உங்கள் வீட்டிலேயே தங்கி இருப்பார்.

 நீங்கள் தேவையில்லாத மன அழுத்தத்தில் உழன்று கொண்டிருப்பீர்கள்.

உங்கள் மனதில் தோன்றும் ஒவ்வோர் எண்ணமும் ஓர் அழையாத விருந்தாளிதான்.

உங்கள் மனம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு வேண்டாத விருந்தாளிதான்.

அதை எதிர்க்காதீர்கள். அமைதியாக எதுவும் செய்யாமல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த பிரச்சனையை முறைத்துப் பார்த்தபடி இருங்கள். வந்த பிரச்சனை தன்னால் போய்விடும்.

வியாழன், 24 பிப்ரவரி, 2022

ஆன்மீகம்




தியானத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்

தியானம் என்றால் என்ன?

நீங்கள் மனதாலோ அல்லது உடலாலும் எதுவும் செய்யாமல் எல்லா நடவடிக்கைகளும் முடிந்த நிலையில் நீங்கள் வெறுமனே, வெறும் உணர்வாய், சாட்சியாய் இருப்பதுதான் ,தியானம் எனப்படுவது. நீங்கள் அதற்காக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இவைகளை நன்றாக புரிந்து கொண்டாலே போதும்.

எப்பொழுது உங்களுக்கு ஓய்வு கிடைக்கிறதோ, அப்பொழுது உங்களது எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டு நீங்கள் வெறும் உள் உணர்வாய் இருங்கள். நினைப்பது அடுத்த ஒன்றின் மேல் கவனம் வைப்பது மற்றும் ஆழ்ந்த சிந்தனை அனைத்தும், அந்த நடவடிக்கைகளில் ஒன்றுதான். இவைகளை விடுத்து ஒரு சில வினாடிகள் ஆவது நீங்கள் உங்கள் உள் மையத்தில் இருந்தால், மிகவும் ஓய்வு தன்மையில் இருந்தால், அதுவே தியானம் ஆகிறது .அதை அடைவது எப்படி என்று புரிந்து கொண்டால் அதில் நீங்கள் விரும்பியவாறு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்க முடியும் உங்களால் ஏன் ,அதில் 24 மணி நேரமும் இருக்கவும் முடியும். 

நீங்கள் அதில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருக்க முடிந்தால், அந்த பாதையை சரியாக புரிந்து கொண்டால், நீங்கள் உங்கள் விருப்பப்படி அதிலிருந்து பிரக்ஞையோடு வெளியே வந்து, பல காரியங்களை செய்யலாம். ஆனால் உங்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது. இந்த நிலையில் இரண்டாவது நிலையாகும் முதலில்,  பிரக்ஞை

நிலையை, விழிப்பு நிலையை பூர்ணமாக அடைதல் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்து அதில் இருந்து வெளியே வந்து சில காரியங்களை எப்படி நடத்துவது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, தரையை சுத்தம் செய்யும் பொழுது, நீரில் குளிக்கும்போது நீங்கள் உங்கள் மனநிலையில் இருந்து நழுவாமல், இவைகளை செய்ய முடியும் பிரச்சனை உள்ள செயல்களில் அதே நிலையில் ஈடுபடமுடியும்.

                                       தொடரும்...


ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

தினம் ஒரு முத்திரை


 *தினம் ஒரு முத்திரை*


*ருத்ர முத்திரை*


சிவபெருமானுக்கு ருத்ரன் என்ற பெயருண்டு. சிவபெரு மானின்
கண்களிலிருந்து தோன்றியது ருத்ராக்ஷம். அக்ஷம் என்றால் கண்,
நல்ல ருத்திராக்ஷத்தை உரைத்துப் பார்த்தால் பசும்பொன்னின் மாற்று
இருக்குமென்று கூறுவார்கள். ருத்ராக்ஷம் அணிபவரை தீயவை
மற்றும் நோய் நொடிகள் அணுகா.
சிவபெருமானைப் பற்றிய மந்திரம் 'ருத்ரம்' எனப்படும். உடல் ஒரு
போக்கிலும் மனம் ஒரு போக்கிலும் செல்ல முடியாது. இரண்டு
குவிந்த நிலையில் இருக்க வேண்டும்.ட அவ்வாறு இல்லாவிட்டால்,
மன இறுக்கம், மனக் குழப்பம், மன அழுத்தம், தெளிவற்ற சிந்தனை,
முரண்பாடான செயல்பாடுகள் ஆகியவை ஏற்படும்.
நம் உடலில் சக்தி, வாயுக்கள், சக்கரங்கள் உள்ளன. பஞ்சபூதங்களும்
குவிந்திருந்தால் சமநிலையில் இருக்கும். இதனால், உடலும் மனமும்
சமநிலையில் இருக்கும்.
பூமி என்பது தாயாக உள்ளது. அதனால் அன்னை பூமி, தாய் நாடு
என்றெல்லாம் கூறுகிறோம். இந்தப் பூமி என்ற பஞ்சபூதம்
தூண்டப்பட்டால், உடல் சமநிலைப் படும்.
சோலார் நரம்புக் குவியல்கள்
சுவாதிஸ்டானம், மணிபூரகம் ஆகிய ஆதாரச் சக்கரங்களுடன் இந்த

நரம்புக் குவியல்கள் இணைந்துள்ளன. நமது வயிற்றுப்ட பகுதியில்
உள்ளே இருக்கும் இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், கணையம்,ட
சிறுநீரகங்கள் ஆகிய முக்கிய உறுப்புகள் இந்த நரம்புக் குவியலின்
கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. இந்த சுவாதிஸ்டானம்,
மணிபூரகச் சக்கரம் இரண்டும் சரிவரச் செயல்படா விட்டால், நரம்பு
கள் பாதிக்கப்பட்டு உள் உறுப்புகள் செயலிழந்துபோகும் வாய்ப்பு
உள்ளது.இந்த ருத்ர முத்திரையைச் செய்யும்போது சோலார் நரம்புக் குவியல்கள்
மற்றும் அதை இயக்கும் மணிபூரகச் சக்கரம் இரண்டும் தூண்டிவிடப்
படுகின்றன.
*செய்முறை*
கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல் ஆகிய மூன்று
விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.
நடு விரலும் சுண்டு விரலும் நேராக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில்
இரண்டு கைகளிலும் செய்யலாம்.
இந்த முத்திரையை பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து
செய்யலாம். இரண்டு கைகளிலும் ஒரே நேரம் ஐந்து முதல் பத்து
நிமிடங்கள் செய்யலாம்.

*பலன்கள்*

1. ரத்த ஓட்டம் சீராகும்.

2. தூய சிந்தனைகள் ஏற்படும்.

3. கண் பார்வைக் குறைபாடு குணமாகும்.

4. சுவாசம் சீர்படும்.

5. இதய வால்வில் உள்ள அடைப்புகள் நீங்கும்.

6. கவனச் சிதறல் ஏற்படாது.

7. பஞ்சபூதங்கள் அனைத்தும் உறுதியாகி சமப்படும்.

8. மண்ணீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் நன்கு செயல்படும்.

9. உயிர் சக்தி அதிகரிக்கும்.

10. தலைவலி, தலைச் சுற்றல் நீங்கும்.

11, ஜீரண சக்தி ஏற்படும்.

12. குடல் இறக்கம், மூலம், கர்ப்பப்பை கோளாறுகள் அகலும்.


சனி, 19 பிப்ரவரி, 2022

அன்பின் வழி

 ஆன்மீகம்- குரு


ஆன்மீகம் எல்லோருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் குழப்பத்தை தவிர்க்க, ஒருவன் தான் தேர்ந்தெடுத்த ஆன்மீகப் பாதையை முழுமையாக மதிக்க வேண்டும். உதாரணத்திற்காக, உணவை எடுத்துக்கொள்ளுங்கள் , பல நாடுகளில் அதன் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப உணவு வகை வெவ்வேறாக இருந்தாலும் அதனை உண்ணும் மக்களுக்கு ஒரே இலக்கு உயிர் வாழ்வதற்கும், வயிற்றின் பசியை பூர்த்தி செய்யவும் உணவு தேவையாகும். இதுபோலவே ஆன்மீகத்தை பலவகைகளில் பின்பற்றலாம். ஆனால் ஆன்மீகத்தின் பாதையில் செல்லும் ஒவ்வொருவருக்கும் முடிவான இலக்கு ஒன்றே ஆகும். கடவுளை அடைய, சில பூஜைகளை செய்ய விரும்புவார்கள். சிலர் பக்தி பாடல்களை (பஜனைகளை) விரும்புவார்கள். சிலருக்கு யோகா, சிலருக்கு தியானம் இவற்றில் எந்தப் பாதை சரியானது அல்லது இவற்றில் எது மிகத் தவறானது என்று ஒருவன் கேட்கலாம். எல்லா பாதைகளும் சரியானதே. உன்னுடைய மனது எதை விரும்புகிறதோ, அந்தப் பாதையின் வழியில் செல். சில நேரங்களில், பலர் தங்களுடைய குருவிடம் சென்று அவர் காண்பிக்கும் பாதையை பின்பற்றுவர்.
ஆனால் ,வேறொரு குரு கிடைத்து விட்டால், முதல் குருவை விட்டு விட்டு அவரிடம் செல்வார்கள். குருவை அடிக்கடி மாற்றுவதால் பல குழப்பங்கள் நேர வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் எந்த வகையிலும் முன்னேற்றம் காண முடியாது. மனதில் சலனம் ஏற்படுகிறது. ஒரு குருவிடம் இருந்து வேறு ஒரு குருவிடம் தாவக்கூடாது. மற்றும் ஒரு குருவோடு மற்றொரு குருவை ஒப்பிடக்கூடாது. மற்றொரு குரு வந்தால் அவரிடமிருந்து ஆசி பெறுங்கள்.அவருடைய போதனைகளை உங்களுடைய குரு கூறுவது போல நினைத்து கேளுங்கள். அவரிடம் உங்களுடைய குருவை காண வேண்டும். இவ்வாறு செய்தால் குழப்பம் நிலவாது. உங்கள் குருவை மற்ற குருவில் பார்த்தால் அவருடைய போதனைகளையும் சரியான வழியில் எடுத்து, ஆன்மீகத்தின் வழியில் செல்ல முடியும்.
இவ்வுலகில் அனைத்து குருவும் நல்லவர்கள்.எந்தப் பாதையிலும் தவறில்லை. எல்லா குருக்களும் கல்கி அவதாரமாக (ஒரு தெய்வீக சக்தி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்து மனித உருவில் வாழ்கிறது) வந்து வாழ்க்கையின் உண்மைகளையும், கொள்கைகளையும் கற்றுக்கொடுக்க வந்துள்ளனர்.மகான்களின் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும்,அனைத்து பாதைகளும் ஒரே இலக்கை போய் எட்டுகிறது -"கடவுள்" ஆன்மீகத்தில் தேர்ந்தெடுக்கும் பாதையில் செல்லவேண்டும். பக்தியை தவறாக உபயோகிக்க கூடாது.
மற்ற குருக்களைப் பற்றி தவறாக பேசக்கூடாது. ஒவ்வொரு குருவும் பிரத்தியேகமானவர்.நாம் வழிபடும் கடவுள் குருவின் வடிவத்தில் வருகிறார். ஆகையால், குருவை பற்றி அவதூறாக பேசினால் கடவுளை அவதூராக பேசுவதற்கு ஒப்பாகும். ஆன்மீகத்தின் பாதையில் அமைதிக்காகவும், சந்தோஷத்திற்காக செல்கிறோம். பல குருக்களையும் கடவுளின் பல்வேறு வடிவங்களாக பார்க்க வேண்டும். நன்மை வெவ்வேறு வழிகளில் அவர்கள் வழி நடத்தினாலும் ஒரே இலக்கை தான் வந்தடையும. மின்சார விளக்கு பலவிதமான சக்திகளில் வரும். ஆனால் அதில் பயன்படுத்தும் மின்சாரம் எல்லாவற்றிலும் ஒரே விதமாக இருக்கும்.
     எல்லோரும் தான் விருப்பத்திற்கு ஏற்ப குருவை தேர்ந்தெடுத்து அவரது போதனைகளை பின்பற்ற வேண்டும். நீ விரும்பிய இந்தப் பாதையை கடைசிவரை பின்பற்றி வாழவேண்டும். உன்னுடைய நண்பர்கள் கூறுவதை கேட்காமல், உன் மனதில் ஒலிக்கும் குரலை கேட்டு அதன்படி நடந்து உனது குருவின் பாதையில் செல்ல வேண்டும். அப்போதுதான் ஆன்மீகத்தின் பாதையில் முன்னேற முடியும். 
எல்லோரும் தான் விரும்பிய ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து, இறுதிவரை அதனைப் பின்பற்றி, கடவுளாகிய இலக்கை அடைய குருவின் அருளை பெற வேண்டும்.
          🙏நன்றி நன்றி நன்றி🙏

மௌனம் 2





நல்லவை நாற்பது தொடர்ச்சி

21. அப்புறம் இல்லாமல் சொல்லும் விஷயங்கள் இருப்பதாகத் தான் இருக்கும். உதாரணம் காட்டி சொல்பவைகள் உண்மையாக இருக்கும். உண்மை கேட்பவர்கள் மனதில் பதிந்துவிடும்.

22. திக்கற்ற முதியோரை காத்திடுங்கள். அதுவே முக்தி பெற வழி என்று நம்பிவிடுங்கள்.

23. உயிரை விட்ட உடனே உடலைச் சுட்டெரித்து விடுவார்கள் சுற்றத்தார்.
ஆகவே இருக்கும் வரை இறைவனை நினைத்துக் கொண்டே இருங்கள்.

24. தாய் சொல்லித்தான் தந்தையை அறிகிறோம். குரு காட்டித்தான் தெய்வத்தை காண முடியும். ஆகவே குருவை நாடுங்கள்.

25. வாழ்க்கையை சாசுவதம் என்றெணணி,பசித்தவருக்கு ஒரு பிடி அன்னம் கூட அளிக்காமல், எமன் வரும்பொழுது வருந்தி என்ன பயன்?

26. செல்வம்  வரும் பொழுது நிதானமாய், அடக்கத்துடன் நடந்து, முடிந்த வரை இல்லாதவருக்கு உதவுங்கள். துன்பம் வரும்போது இறைவனிடம் சரண் அடையுங்கள்.

27. மாயையான உலகில், இருப்பது பொய், போவது மெய் என்றெண்ணி, ஒருவருக்கும் தீங்கு எண்ணாதீர்கள்.

28. அன்பினால் தர்மம் பிறக்கிறது. தர்மத்தினால் தியாகம் பிறக்கிறது. அன்பும், சேவையும் தான் மனித குலத்தின் உயிர்நாடி.

29. இல்லாதவர்களுக்கு உதவி செய்வதுதான், நீங்கள் இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம் ஆகும்.

30. மனிதன் பற்றுகின்ற பொருள்களெல்லாம் அவனைப் பற்றிக் கொள்ளும் . பற்றை விட்டுவிடுங்கள். பற்றியவை பற்று அற்று போய்விடும்.

31. ஏளனம் செய்வது எளிது. ஆனால் ஏளனம் என்றும் ஏளனம் செய்தவரையே ஏளனப்படுத்தும். ஆகவே நாக்கிற்கு சிரமம் கொடுக்காதீர்கள்.

32. அன்பை கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர் மீது அன்பு செலுத்தினால் தான் வாழ்வை கற்றுக்கொள்ள முடியும்.

33. அதிகம் பேசுவதை தவிர்த்து விடுங்கள். ஆயிரம் சொற்கள் பேசுவதைவிட ஒன்றே ஒன்று உண்மைக்காக பேசுவது சிறந்தது.

34.காலச் சக்கரத்தின் அச்சு தான் கடவுள். வெளி விளிம்பில் இருந்து அச்சை நோக்கி நகருங்கள். காலம் உங்களை சுற்றி சுழற்றும்.அப்போது நீங்கள் காலத்தோடு சேர்ந்து சுழல மாட்டீர்கள்.

35. இளமையின் வேகத்தில் இன்றுஆட்டம் போடுபவர்கள், நாளை முதுமையில் தோல் சுருங்கி அழ போவதை மறந்து விடுகிறார்கள். ஆகவே எல்லா நிலைகளிலும் அமைதியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள்.

36. கடவுளிடம் சங்கமமாகும் வாழ்க்கை வேறு வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆகவே கடவுளோடு சங்கமமாகும் வழியை தேடுங்கள்.

37. தன்னிடம் இருப்பதை தவறாகப் பயன்படுத்துபவன் ஏழை. அதை சரியாக பயன்படுத்த பவனே செல்வந்தன்.

38. புகழைப் பெறுவதிலும், கொடுப்பதிலும் எச்சரிக்கை தேவை. தகுதியும், உண்மையும் இருந்தாலும் கூட புகழின் வார்த்தைகளில் செவிடாகவும் ,ஊமையாகவும் இருப்பது நல்லது. ஏனெனில் அது அகங்காரத்தில் வழிவகுத்துவிடும்.
            
             🙏  நன்றி நன்றி நன்றி🙏

வியாழன், 17 பிப்ரவரி, 2022

மௌனம் 1

  

மகா அவதார் பாபாஜி

நல்லவை நாற்பது

1. மௌனம் இறைவனின் மொழி. பணிவு, அமைதி, மவுனம் ஞானத்தின் அறிகுறிகள். ஆகவேதான் ஞானிகள் அதிகம் பேசுவதில்லை.

2. எது வந்தாலும் அதை ஆண்டவனின் விருப்பம் என ஏற்றுக் கொள்க. எது சென்றாலும் அதுவும் ஆண்டவனின் விருப்பமே என ஏற்றுக் கொள்க. எதையும் ஒன்றாக என்னும் சமநிலை பக்குவம் வந்து விட்டால் எந்த கஷ்டமும் நம்மை பாதிக்காது.

3." நான்" என்ற அகங்காரத்தில் இருந்து நீங்கள் விடுபட்டு விட்டால் உங்கள் மனம் தூய்மை அடைகிறது. அதன் மூலம் மேலான மெய்யறிவை இறை உணர்வை உணருவதற்கு தயாராகிறார்கள்.

4. தோல்வி ஒவ்வொன்றும் வெற்றி படியாகவும் அதேபோல் நாம் செய்யும் தவறுகளும் வாழ்க்கையை திருத்திக்கொள்ளும் படிகட்டாகும்.

5. தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் அன்று நடந்த நிகழ்ச்சிகளை நினைத்துப் பாருங்கள். தவறு செய்திருந்தால் ஆண்டவனிடம் மன்னிப்பு கேளுங்கள். நல்லவை செய்திருந்தால் அதன் பலனை ஆண்டவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள். இது உங்களை நீங்களே ஆத்ம பரிசோதனை செய்வதாகும்.

6. உண்மையான அன்பு என்பது, கொடுப்பது மட்டுமே. அங்கே வியாபாரமோ, பரிமாற்றமோ கிடையாது.

7. தவறு செய்யாத மனிதன் இல்லை. உணராதவன் மனிதனே இல்லை.

8. தியானம் செய்யுங்கள். அது சீக்கிரமே உங்களை எல்லாவிதமான துக்கத்தில் இருந்தும் விடுபட வைக்கும்.

9. மலைகளில் மலைவாழ் மக்கள் பலர் வாழ்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் கடவுள் தரிசனம் கிட்டி விட்டதா? என்றால் இல்லை. ஆகவே, ஞானத்தை அசைவற்ற மழையிடம் இருந்து தெரிந்து கொள்வதை விட ஓர் ஆத்ம ஞானம் இருந்து அதாவது ஒரு குருவிடமிருந்து தெரிந்துகொள்வது தான் மிகவும் நல்லது.

10. சதையும் எலும்பும் கூடிய கட்டான உடல் தான் நீ என்று எண்ணிவிடாதே அது ஒரு துன்பக் கூடு தவிர வேறன்று.

11. தன்னை அறிந்தவன் மரணத்தையும் அறிகிறான். அவன் கட்டளையிட்டால் தான் மரணம் அவனிடம் நெருங்க முடியும்.

12. நம்பிக்கையாலும், பக்தியாலும் மட்டுமே தெய்வீகக் காட்சிகளைக் காணும் நிலை கிடைக்கும்.

13. மனம் சஞ்சலப்பட்டு அலைமோதும் வரையில் அதில் ஆத்மாவின் தெளிவான பிம்பத்தை காண முடியாது. ஆகவே அமைதியை நாடுங்கள்.

14. அகத்தில் இருக்கும் ஆண்டவனை அறிந்தால் தான் அவரை புறத்திலும் காண முடியும்.

15. மனம் சுத்தமாக இருந்தால் அதை இறைவன், தான் குடியிருக்கும் கோயிலாக ஏற்றுக் கொள்கிறான்.

16. இன்பம் வரும்போது அதனால் கிடைக்கும் பலன்களை ஆண்டவனுக்கு அர்ப்பணித்து விட்டால், துன்பம் வரும்போது அந்த பாரத்தை அவனே தாங்கிக் கொள்வான்.

17. இறந்த பின்னே எதுவுமே கூட வராது. நாம் செய்த புண்ணியம் பாவம் மட்டுமே கூட வரும்.

18. வாழ்க்கையில் வளர்ச்சி வரும்பொழுது அடக்கமும் வளர வேண்டும். இல்லையெனில் தூக்கி வைத்த பேசியவர்கள் எல்லாம், சிறு சருக்கம் வந்தாலும் கீழே தூக்கிப் போட்டு விடுவார்கள்.

19. சொந்தமும் பந்தமும் செல்வமோ எதுவுமே சாசுவதம் கிடையாது. இறைவனின் திருவடியே சாசுவதம்.

20. பிறவாமை வேண்டும் ஒருவேளை மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும் என்று ஈசனிடம் வேண்டுங்கள்

                                          தொடரும் ...            


ஞாயிறு, 19 டிசம்பர், 2021

நெல் அறிவோம்


 நம் நெல் அறிவோம்

பெருங்கார் நெல்

நாம் மறந்து போன

பாரம்பரிய நெல் வகைகளின் நன்மைகளை இந்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தினமும் ஒரு பாரம்பரிய நெல் இரகத்தின் அரிசியை பற்றி பதிவிட்டு வருகிறேன்.


அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது பெருங்கார் நெல் என்கிற பாரம்பரிய ரகம் நெல் பற்றி தான்.

பெருங்கார் (Perunkar) 

என்னும் இந்த நெல் வகை, 

ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். 

தமிழகத்தின், திருவண்ணாமலை மாவட்டத்தின், வந்தவாசி 

வட்டராத்தில் உள்ள "தக்கண்டராபுரம்" எனும் நாட்டுப்புறப் பகுதியில் முதன்மையாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1400 கிலோ நெல் தானியமும், சுமார் 1500 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாக கருதப்படுகிறது.


குறுகியகால நெல் வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான குறுவைப் பட்டம் எனும் இப்பருவத்தில், 120 நாள் நெற்பயிரான பெருங்கார் பயிரிடப்படுகிறது.


மேலும் சூன்,மற்றும் ஜூலை 

மாதங்களில் தொடங்கக்கூடிய இக்குறுவைப் பட்டத்தில் தமிழகத்தின் கரூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களிலும், குறுவை சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாக கருதப்படுகிறது.


நேரடி நெல் விதைப்பு, மற்றும் நாற்று நடுதல் என இரண்டு முறைகளையும் பின்பற்றி பயிரிடப்படும் இந்த நெற்பயிர், நேரடி விதைப்புக்கு 35 கிலோ நெல் விதையும், நாற்று நடவு முறைக்கு 40 நெல்விதையும் தேவைப்படுகிறது. 

4.½ அடி உயரம் வரை வளரக் கூடிய இந்நெல் இரகம், தண்டு துளைப்பான் மற்றும் கதிர்நாவாய்ப்பூச்சி ஆகியவற்றை எதிர்த்து வளரும் ஆற்றலுடையது.

தொடர் நீர்த்தேக்கப் நிலப்பகுதியில் செழித்து வளரக்கூடிய இந்த நெற்பயிரின் அரிசியில்,

தென்னிந்திய உணவாக கருதப்படும் இட்லி, மற்றும் தோசைப் போன்ற சிற்றூண்டிகள் தயாரிக்க ஏற்றதாக கூறப்படுகிறது.

பொதுவாக சிகப்பு அரிசியைப் பார்த்தவுடன் பலர் கூறுவது இது கார் அரிசி என்று.


 பலரின் மனதில் பாரம்பரிய அரிசிகள் பலவற்றை பற்றி தெரிந்திருந்தாலும் சிகப்பரிசியைக் கண்டவுடன் கூறும் வார்த்தை கார் அரிசி என்று.. அப்படியானால் கார் அரிசி என்பதற்கும் சிகப்பரிசிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இந்த சிகப்பரிசியை கார் அரிசி என்று பலர் பொதுவாக கூறுகின்றனர் என்ற கேள்வி உள்ளது?

கார் அரிசி என்பது பொதுவாக குறைந்த மாதங்கள் விளையும் சிகப்பரிசி.  பெரும்பாலான இடங்களில் அதுவும் வட தமிழகத்திலும் மற்ற மாவட்டங்களிலும் விளையும் அரிசி ரகம் இது.

அதிக இடங்களில் விளையக் கூடிய சிகப்பரிசி ரகமாக இருந்தது மட்டுமல்லாது குறைந்த மாதம் (சம்பாவைப் போல் ஆறுமாதம் இல்லை) விளைவித்ததாலும் பெரும்பாலான விவசாயிகளுக்கும் மற்றவர்களுக்கும் பரிச்சியமான ரகமாக இருந்தது.காலப் போக்கில் பாரம்பரிய ரகங்கள் பல காணாமல் போனாலும் சிகப்பரிசி என்றவுடன் தங்களுக்கு தெரிந்த கார் அரிசியாக இது இருக்குமோ என்ற பெருமை உணர்ச்சியால் பலர் சிகப்பரிசியைக் கண்டவுடன் கார் அரிசி என்று மலரும் நினைவுகளாக தங்களின் மகிழ்ச்சி உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.இதனாலேயே இத்தனை பாரம்பரிய சிகப்பரிசிகள் தனித்தன்மை, மருத்துவகுணம், சுவை, பெயருடன் இருந்தாலும் பொதுவாக கார் என்று அழைக்கின்றனர்.


பெருங்கார் அரிசி

சூன்,மற்றும் ஜூலை 

மாதங்களில் தொடங்கக்கூடிய குறுவைப் பட்டத்தில்

விதைத்து 120 நாட்களில் அறுவடைக்கு வரும் அதாவது மழைக்காலமான கார் காலத்தில் விதைக்கும் அரிசி ரகங்களை கார் அரிசி என்பர். 

இந்த கார் அரிசியில் பல பல ரகங்களும் உள்ளது.


உதாரணத்திற்கு பாரம்பரிய கார் அரிசி, குள்ளக்கார் அரிசி, பூங்கார் அரிசி, கருத்தக் கார் அரிசி, சித்திரைக்கார்,

பெருங்கார் என பல உள்ளது.

பெருங்கார் அரிசி சத்துக்கள்

சிகப்பரிசியான பாரம்பரிய பெருங்கார் அரிசி பல பல மருத்துவகுணம் கொண்டது. நார்ச்சத்து, சிறிது புரதம், பல தாது உப்புக்களும், வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்பு, இரும்பு சத்தும் நிறைந்ததாக இருக்கிறது. 

பெருங்கார் அரிசியில் என்ன உணவு தயாரிக்கலாம்?

கார் அரிசி என்றவுடன் புட்டு அரிசி என்ற பொதுக்கருத்து உள்ளது. 

புட்டிற்கு மட்டுமல்லாது மற்ற அனைத்து உணவினையும் இந்த பெருங்கார் அரிசியில் தயாரிக்கலாம்.

இந்த பெருங்கார் அரிசியினை வேகவைத்து  வெங்காயம், கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை, தக்காளி சேர்த்து கடலை சாதம் தயாரித்து கொடுக்க உடலுக்கு தேவையான போலிக் அமிலம் குறையாமல் கிடைக்கும். 

இதனால் உண்பவருக்கு மன அமைதி மட்டுமல்லாது உடலில் விஷப் பொருட்கள் சேராமல் இருக்கும்.

பெருங்கார் அரிசியினை மாவாக அரைத்து அதில் எலுமிச்சை இடியாப்ப சேவை செய்ய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்.

விருப்பமும் சுவையும் மட்டுமல்ல இதனை உண்பதால் உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் சீராகப் பெறுவதுடன் இரத்த சோகை, மாதவிடாய் தொந்தரவுகளும் நீங்கும்.

பெருங்கார் அரிசி மூன்று பங்கிற்கு ஒரு பங்கு உளுந்தம் பருப்புடன் சிறிது வெந்தயம் சேர்த்து இட்லி மாவு அரைத்து எட்டு மணிநேரம் புளிக்க வைத்து அதனுடன் தக்காளி சட்னி செய்து உண்ண வயதானவர்களுக்கும் உடல் எலும்புகள் மற்றும்  திசுக்கள் பலம் பெறுகிறது.


இது உடல் மெலிவாக இருப்பவர்களுக்கு நல்ல போஷாக்கையும், சதைப்பற்றையும் அளிக்கிறது. 


அதுமட்டுமல்ல இதனை தொடர்ந்து உண்டுவர 

உடல் தொய்வில்லாமல் புத்துணர்வுடன் காணப்படும்.


பெருங்கார் அரிசியில் சுவையான பிஸிபேளா பாத் தயாரித்து உண்ணலாம்


. சன்ன ரக பாலிஷ் அரிசியிலேயே உணவை உண்ட நமக்கு இந்த அரிசி சாதம் சற்று பெரிதாக தோன்றினால் அரிசியினை ஒன்றும் பாதியுமாக உடைத்தும் பயன்படுத்தலாம்.


இவ்வாறு பெருங்கார் அரிசியினை ஒன்றும் பாதியுமாக உடைத்து அதனுடன் துவரம் பருப்பு, கேரட், பீன்ஸ், பட்டாணி, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து பிஸிபேளா பாத் தயாரிக்க சுவை பிரமாதமாக இருக்கும். 


மேலும் உடலுக்கு தேவையான பல சத்துக்களும் கிடைக்கும்.


இந்த உணவால்  உடலுக்கு தேவையான மக்னீசியம் சத்து, இரும்பு சத்து போன்ற சத்துக்கள் சீராக கிடைக்கிறது. 


உடலில் ஏற்படும் குடல் புழுக்களால் அவதிப்படுவோருக்கு மாமருந்தாக இது அமைகிறது. நோய் எதிர்ப்பு தன்மையையும் அளிக்கிறது. 


இவ்வாறு பல பல உணவுகளை பெருங்கார் அரிசியில் தயாரித்து  உண்ண உடல் பலப்படும். 


பல சத்துக்கள் நிறைந்த இந்த பாரம்பரிய அரிசியினை தொடர்ந்து பக்குவமாக சமைத்தும், கவனமாக சுவைத்தும் பயன்படுத்திவர பல நோய்களுக்கு இது மாமருந்தாகும்.


பெருங்கார் அரிசி என்பது ஒரு வகை பாரம்பரிய ரகம் என்பதையும், சிகப்பாக இருக்கும் அரிசியெல்லாம் கார் அரிசி இல்லை என்பதனையும் மறவாமல், ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தன்மையும், சுவையும், குணமும் உள்ளது என்பதை புரிந்து கொள்வோம்.

புதிதாக இந்த அரிசியினைப் பற்றி கேள்விப் பட அனைத்தும் ஒன்றைப்போல் தோன்றும் ஆனால் ஒவ்வொன்றும் வெவ்வேறானது.

சனி, 18 டிசம்பர், 2021

குளிர்காலத்தில் உட்கொள்ள வேண்டிய 7 உணவுகள் ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது

 


குளிர்காலத்தில் உட்கொள்ள வேண்டிய 7 உணவுகள் ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது

குளிர்காலத்திற்கான உணவுகளை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது

குளிர்காலம் என்பது உங்கள் அன்புக்குரியவர்களுடன் பதுங்கி இருக்கவும், சூடான உணவுகளை உண்ணவும் குடிக்கவும் ஒரு நேரமாகும், அது உங்களை வெப்பமாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் ஆன்மாவையும் திருப்திப்படுத்துகிறது. நாம் எதிர்நோக்கும் பருவம் இது, ஆறுதல் உணவு. மிருதுவான சில்லுகள் முதல் சூடான மற்றும் சிஸ்லிங் மேகி அல்லது சூடான பிரவுனி மற்றும் அதன் மேல் சில சாக்லேட் வரை, ஆறுதல் உணவு வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு வரையறைகளைக் கொண்டிருக்கலாம். இந்த வகையான உணவை உட்கொள்ளும் போது, ​​அது ஒருவரின் ஆற்றலை வடிகட்டுகிறது, அதே நேரத்தில் உடலில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது, இது வாத, பித்த மற்றும் கப தோஷத்திற்கு வழிவகுக்கும். ரிதுச்சார்யா அல்லது ஆயுர்வேதத்துடன் ஒருங்கிணைந்த பருவகால விதிமுறைகளின்படி, குளிர்காலத்தின் ஆரம்பம் (ஹேமந்த்) முதல் குளிர்காலத்தின் பிற்பகுதி (ஷிஷிர்) வரை, வட்டா மற்றும் கபா ஏற்றத்தாழ்வுகள் அதிகம். ஒரு சீரான கஃபா மூட்டுகளின் உயவு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தோலின் மென்மை ஆகியவற்றில் உதவுகிறது மற்றும் இந்த தோஷம் அதிகமாக இருந்தால், இது சளி தொடர்பான நோய்கள், எடை அதிகரிப்பு, மந்தமான தன்மை மற்றும் எதிர்மறை உணர்ச்சிகளுக்கு கூட வழிவகுக்கும். மறுபுறம், உங்கள் வாத தோஷம் தீவிரமடைந்தால், அது அஜீரணம் மற்றும் மூட்டு வலிக்கு வழிவகுக்கும். எனவே, மூத்த ஆயுர்வேத நிபுணரான டாக்டர் விஷாகா மகிந்த்ரூவிடம் பேசினோம், அவர் இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று எங்களிடம் கூறினார், இது வாத மற்றும் கப தோஷத்தை ஆறுதல் & அமைதிப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்களை சூடாகவும் வைத்திருக்கும். எனவே, குளிர்காலத்தில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ரிதுச்சார்யா டயட் இங்கே உள்ளது. குளிர்காலத்தில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ரிதுச்சார்யா உணவு முறை. குளிர்காலத்தில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ரிதுச்சார்யா உணவு முறை.
ரிதுச்சார்யா உணவுமுறை என்றால் என்ன?

'ஆயுர்வேத ஆராய்ச்சியின் சர்வதேச காலாண்டு இதழில்' வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ரிதுச்சார்யா என்பது பருவங்களின் மாற்றத்துடன் மாறுபடும் விதிகள் அல்லது விதிமுறைகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த விதிகள், குளிர்காலத்தில் தோஷத்தைத் தணிக்கவும், நம்மையும் சூடாக உணரவும் எந்த வகையான உணவுகளை உண்ண வேண்டும் என்பதை விளக்கும் பருவகால வழிகாட்டுதல்களாகச் செயல்படுகின்றன. இந்த விதிகளின்படி, குட், நெய்யுடன் கூடிய கிச்சடி, வெதுவெதுப்பான தங்கப் பால், எள், கரும்புப் பொருட்கள், ஊறவைத்த பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள், சிக்கன் சூப், நெய்யுடன் பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் துளசி போன்ற மூலிகைகளால் செய்யப்பட்ட கிரீன் டீ போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும். , எலுமிச்சை மற்றும் இஞ்சி. இந்த உணவுகளில் ஒவ்வொன்றும் அதன் நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் இந்த காலகட்டத்தில் சாப்பிட வேண்டும். ரிதுச்சார்யா உணவில் உண்ணக்கூடிய அத்தகைய அனைத்து உணவுகளின் பட்டியலையும் அவற்றின் நன்மைகளுடன் கீழே காணலாம்.

வெல்லம் (குட்)

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லம் உடலுக்குள் வெப்பத்தை உண்டாக்குகிறது, அதே நேரத்தில் எந்த வகையான மாசுபாட்டையும் நீக்குகிறது. இது மிகவும் அற்புதமான உணவாகும், இது செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். எனவே, பொதுவாக, இந்த உணவை தங்கள் குளிர்கால உணவில் சேர்க்க வேண்டும்.

நெய்யுடன் கிச்சடி


இந்திய உணவு வகைகளில் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு சூப்பர்ஃபுட் மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அறியப்படுகிறது. அதனால்தான் உடல்நிலை சரியில்லாதவர்கள், இந்த சூப்பர்ஃபுட் சிறிது பசு நெய்யுடன் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. இந்த அரிசி மற்றும் பருப்பு கலவையானது காய்கறிகளுடன் இணைந்தால் மனித உடலுக்கு அத்தியாவசிய அமினோ அமிலங்களை வழங்குகிறது மற்றும் உணவை புரதம் நிறைந்ததாக மாற்றுகிறது

எள் விதைகள் (வரை)

எள் விதைகள் இயற்கையாகவே சூடாகவும் நல்ல கொழுப்புகள் நிறைந்ததாகவும் இருக்கும். இந்த விதைகள் செம்பு, இரும்பு, துத்தநாகம் மற்றும் பல்வேறு வைட்டமின்கள் நிறைந்ததாக அறியப்படுகிறது. இந்த விதைகள் மிகவும் நல்லது, அவை குளிர்கால காய்ச்சலைத் தடுக்கின்றன, அதே நேரத்தில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. இந்த காரணத்திற்காகவே, குளிர்காலத்தில் தயாரிக்கப்படும் பெரும்பாலான இனிப்புகளில் எள் விதைகளைக் காணலாம் - தில் லட்டு மற்றும் தில் சிக்கி.  நெய்யுடன் கலந்த பச்சை இலைக் காய்கறிகள்

இந்த பருவத்தில், பருவகால சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு தேவை. எனவே, ஒருவர் குளிர்காலத்தில் பச்சை இலைக் காய்கறிகளான பாலக், சர்சன், சௌலை, மேத்தி இலைகள், பாத்துவா போன்றவற்றை சாப்பிட வேண்டும், ஆனால் சிறிது பசு நெய்யுடன். இந்த கலவையானது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், போதுமான வெப்பத்தையும் உங்களை திருப்திப்படுத்துகிறது.

மஞ்சள் பால்

இதை தங்க பால் அல்லது மஞ்சள் பால் என்று அழைக்கவும், இது குளிர்காலத்தில் உங்களுக்கு மிகவும் தேவையான வெப்பத்தை வழங்குகிறது. கடினமான மூட்டுகள், அஜீரணம், குளிர்கால சைனஸ்கள் மற்றும் பருவகால சளி மற்றும் இருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற படுக்கைக்கு முன் இந்த பாலை குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

மூலிகை
பச்சை தேநீர்

நாம் அனைவரும் குளிர் காலத்தில் சூடான பானங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம். துளசி, இஞ்சி மற்றும் எலுமிச்சம்பழம் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை கிரீன் டீ சாப்பிடுவது எப்படி? இந்த கிரீன் டீ உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதே வேளையில் குளிர்ந்த குளிர்காலத்தில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். இந்த சூடான பானத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.

வியாழன், 16 டிசம்பர், 2021

பிரண்டையின் உயர்ந்த குணமும் உண்மையான மருத்துவ பயனும்

 

பிரண்டையின் பயன்கள்




பிரண்டையின் உயர்ந்த குணமும்
உண்மையான மருத்துவ பயனும்

  உடலை எப்பொழுதும்  உறுதியாய் வைத்திருக்க உதவும் ஒரு மாபெரும் மருத்துவ குணத்தை பெற்ற ஒரு அறிய மூலிகைதான் பிரண்டை

  உடலின் தளர்வுகளை நீக்கி தசை மற்றும் எலும்புகளுக்கு வலிமையை தந்து உடலின் உறுதிக்கு உத்தரவாதத்தை தரும் ஒரு உன்னதமான உயர்ந்த மூலிகை என கூட பிரண்டையை சொல்லலாம் 
நோயின்றி வாழ நமக்கு இயற்கை தந்த ஒரு வரப்பிரசாதம்  தான் பிரண்டை என சொன்னாலும் அது மிகையாகாது

  பொதுவாக பிரண்டையில் பலவகை இருந்தபோதிலும் குணத்தில் அனைத்து வகையான பிரண்டையும் ஏறக்குறைய ஒரே மாதிரியான மருத்துவ குணத்தை தான்  பெற்றிருக்கின்றன

  பிரண்டையின் பெருமையைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பிரண்டையை ஒரு அதிசய மூலிகை என்றே சொல்ல வேண்டும் ஏனெனில் பூமியில் விளையும் கீரைகள் அல்லது காய்கறிகளை புளியுடன் சேர்த்து சமைத்து உண்டால் அதன் மருத்துவகுணம்  கட்டாயமாக மாறுபடும்
அதாவது மூலிகை மற்றும் காய்கறிகளின் சத்து தன்மை புளியுடன் சேர்ந்தாரல் உறுதியாக கெட்டுவிடும் ஆனால்
பிரண்டையை புளியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டாலும் கூட அதன் மூலிகை சத்துவம் பாதிக்கப்படுவதில்லை அப்படி ஒரு உயர்ந்த சக்தியை இந்த மூலிகைக்கு இயற்கை தந்திருக்கின்றது

   எந்த ஒரு வகையில் பிரண்டையை சாப்பிட்டாலும் அது உடலுக்கு உறுதியை தரும் என்பதை உணர்ந்தே சித்தர்கள் இதற்கு வச்சிரவல்லி என்று பெயர் வைத்துள்ளார்கள்

   பிரண்டையை சாப்பிட்டு வருபவரின் உடலானது வைரத்தைப் போல உறுதியாக இருக்கும் என்பதாலேயே இதன் உறுதித்தன்மையை உலகம் அறிய வேண்டி சித்தர்களால் இந்த மூலிகைக்கு இப்படி ஒரு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது

  இதிலிருந்து தெரிவது யாதெனில் பிரண்டையை சாப்பிட்டால் உடலுக்கு உறுதி உண்டாகும் நோய் நொடிகள் நீங்கும் இது உண்மை

பிரண்டையின் உயர்ந்த
மருத்துவ பயன்களில் சில

கை கால்களில் ஏற்படும்
சுளுக்கு மற்றும் வீக்கம் நீங்க

பிரண்டையை இடித்து சாறு பிழிந்து இதன் அளவில் கால் பங்கு உப்பும் கால் பங்கு புளியும் சேர்த்து இதை ஒன்றாக கரைத்து அடுப்பில் வைத்து இளஞ்சூட்டில் காய்ச்சி பசைபோல வந்தபின் லேசான சூட்டில் வலி மற்றும் வீக்கம் உள்ள இடங்களில் இதை பற்று போட்டுவர வலியும் வீக்கமும் நீங்கும்

  அடிபட்ட இரத்தக்கட்டும் இதன் மூலம் குணமாகும் உடலில் சுளுக்கு ஏற்பட்டு இருந்தாலும் பிரண்டை சாற்றுடன் உப்பு புளி சேர்த்து காய்ச்சி பற்றாக போட்டு வர சுளுக்கு மற்றும் வாத பிடிப்பு விலகும்

  பிரண்டையின் வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து இந்த பொடியை சிறிது நெய் விட்டு லேசாக வறுத்து இதில் இரண்டு கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் வெந்நீருடன் கலந்து பருகிவர அடிபட்ட வீக்கமும் வலியும் சுளுக்கும் குணமாகும் உடலுக்கு உறுதியும் நரம்புகளுக்கு வலிமையும் உண்டாகும்
ரத்த மூலம் குணமாக

  இளம் தளிரான பிரண்டையை கொண்டு வந்து மேல் தோல் மற்றும் கனுவை நீக்கிவிட்டு உள் சதையை மட்டும் எடுத்துக் கொண்டு இதனை நெய்விட்டு நன்றாக வதக்கி மை போல அரைத்து இதை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி கொண்டு காலை மாலை இருவேளையும் உடல் மற்றும் நோய்க்கு தகுந்தாற்போல ஒன்று அல்லது இரண்டு உருண்டைகள் வீதம் தினந்தோறும் நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த மூலம் முழுமையாக குணமாகும்

உடலுக்கு உறுதியை உண்டாக்க
உணவுமுறை வைத்தியம்.
 
   பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையலாக செய்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வர தேகம் வலிமை பெறும் உடல் உறுப்புக்களுக்கு உறுதி ஏற்படும்

  பிரண்டையை ஏதாவது ஒரு வகையில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும் வாய்வு கோளாறு நாவின் சுவையின்மை குணமாகும் நல்ல பசி ஏற்படும் ஜீரண குறைபாடு நிவர்த்தியாகும் அஜீரணக் கோளாறு நீங்கி உடலுக்கு ஆரோக்கியமும் அதிக சக்தியும் உறுதியாக கிடைக்கும் மேலும் தீராத மலச்சிக்கல் தீரும் மலச்சிக்கலை நீக்கி இதன் மூலம் உடலில் ஏற்படும் பல நோய்களை  உடலை விட்டு அகற்றி நம்மை ஆரோக்கியமாக வளர்க்கும் ஒரு அற்புதமான மூலிகைதான் பிரண்டை என்பதாகும்

  பிரண்டையை சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும் ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புகளை அகற்றி ரத்த ஓட்டம் சீராக இயங்கும் மேலும் ரத்தம் சுத்தமாகி இதயம் பலம் பெறும்.

உடலின் இயக்கங்கள் சீராக இயங்க உறுதுணையாக பிரண்டை கட்டாயமாக உதவி செய்யும்

உடல் பிணிகள் முழுவதும் நீங்க பிரண்டை உப்பு தயாரிக்கும் முறையும்
இதன் மூலம் கிடைக்கிற பயனும்
பிரண்டையை கொண்டு வந்து வெயிலில் உலர்த்தி காயவைத்து இதை எரித்து சாம்பலாக்கி இந்த பிரண்டையின் சாம்பலை சல்லடையில் சலித்துஎடுத்துக் கொண்டு

ஒரு கிலோ பிரண்டையின் சாம்பலுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி ஒரு நாள் இரவு முழுவதும்
(12 மணி நேரம்) வைத்திருந்து
பிரண்டை சாம்பலை கரைத்த நீர் தெளிந்தபின் இந்த தெளிந்த நீரை ஒரு பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி இதை தினந்தோறும் வெயிலில் வைத்து நீர் சுண்டும் வரை குறைந்தது பதினைந்து நாட்கள் வெயிலில் வைத்து நீரை சுண்டவைத்தால் நீர் சுண்டி இது உப்பாக மாறும் இந்த உப்பை பீங்கான் பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்து கொண்டு இதை சாப்பிட்டு வர தீராத பல நோய்கள் தீரும்
பிரண்டை உப்பை சாப்பிடும்முறையும்
இதன்மூலம் கிடைக்கின்ற பயன்களும்

பிரண்டை உப்பில் ஒரு கிராம் எடுத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து குழந்தைகளுக்கு குடிக்க கொடுத்து வர அஜீரணத்தால் ஏற்படும் வாந்தி பேதி குணமாகும் செரியாமை நோய் விலகும்.
பிரண்டை உப்பில் இரண்டு அல்லது மூன்று கிராம் எடுத்து இதை வடித்த கஞ்சி அல்லது பசு மோரில் கலந்து பெரியவர்களுக்கு கொடுத்து வர குடல் சார்ந்த நோய்கள் அனைத்தும்முழுமையாககுணமாகும்.வாய்வு  தொல்லை வயிற்று உப்புசம் செரியாமை பசியின்மை மலச்சிக்கல் மற்றும் உடல் தளர்வு உடல் அசதி இவைகள் அனைத்தும் நீங்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியும் உடல் அசதியும் குணமாகும்
பிரண்டை உப்பை 2 கிராம் எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினம் இருவேளை தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வர வாய்ப்புண் வாய் நாற்றம் நாவில் ஏற்படும் வெடிப்பு மற்றும் உதட்டில் உண்டாகும் ரணம் உதடு வெடிப்பு இது போன்ற உஷ்ண நோய்கள் முழுமையாக நீங்கும்.

பிரண்டை உப்பை தொடர்ந்து 40 நாட்கள் வெண்ணையில் குழைத்து சாப்பிட்டு வர அனைத்து விதமான மூல நோய்களும் நீங்கும் உடலில் ஏற்படும் அரிப்பு கடுப்பு ஆசனவாயில் நமைச்சல் எரிச்சல் குறிப்பாக ரத்த மூலம் போன்ற அனைத்து நோய்களும் எளிதாக குணமாகும்.
பிரண்டை உப்பை இரண்டு கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும் ஊளை தசை நீங்கும் வயிற்றில் வளர்ந்துவரும் கொழுப்பு தசைகள் நீங்கி தொப்பை குறைந்து விடும்

ஆண்மை சக்தி அதிகரிக்க :பிரண்டை உப்பு ஒரு பங்கு ஜாதிக்காய் பொடி இரண்டு பங்கு இவைகளை ஒன்றாகக் கலந்து
வைத்துக்கொண்டு இதில் 2 கிராம் எடுத்து பசும்பாலுடன் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்,நீர்த்த விந்து கெட்டிப்படும் உடலுக்கு உறுதியும் வலிமையும் உறுதியாக உண்டாகும்  கை கால் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலிகள் முழுமையாக நீங்கும்மொத்தத்தில்
உடல் நோய்களை நீக்கி உறுப்புகளின் தளர்வுககளை போக்கி உடலுக்கு வலிமையை ஏற்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்கும் ஒரு அற்புத மூலிகைதான் பிரண்டை என்பதாகும்எனவே
உடலுக்கு உறுதியை உண்டாக்க
உடற்பிணிகளை உறுதியாக நீக்க
உடனே பிரண்டையை சாப்பிடுங்க

Health care


 வால் சிவப்பு நெல்


நாம் மறந்து போன
பாரம்பரிய நெல் வகைகளின் நன்மைகளை இந்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தினமும் ஒரு பாரம்பரிய நெல் இரகத்தின் அரிசியை பற்றி பதிவிட்டு வருகிறேன்.

அந்த வகையில்
இன்றைய பதிவில்
நாம் பார்க்க இருப்பது
*வால் சிவப்பு *
என்கிற பாரம்பரிய ரகம்
நெல் பற்றி தான்.

பாரம்பரிய நெல் வகையாக உள்ள வால் சிவப்பு (Val Sivappu) நெல் தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள 
“வெள்ளப்பாலம்” மற்றும் “கீவலுார்” போன்றப் பகுதிகளில் நன்கு வளரக் கூடிய நெல் இரகமாகும்.

145 - 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய
இந்த நெல் இரகம், சுமார் 160 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக் கூடியதாகும்.
வால் சிவப்பு நெல்மணி
சிவப்பு நிறமுடனும், சிறந்த சுவையுடனும் விளங்குகிறது.

மேலும், இந்த நெல் மணியின் பின்புறத்தில் காணப்படும் ஒரு முள், மயிர் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும் சிறிய பறவையின் வால் போன்று காட்சி அளிக்கிறது.மத்திய, மற்றும் நீண்டகாலப் பருவங்களுக்கு ஏற்ற இரகமான வால் சிவப்பு, செப்டம்பர் 15 இல் தொடங்கும் பின் சம்பா பட்டம் (பருவம்) ஏற்றதாகும்.

மேலும், தமிழகத்தின் 
திருவள்ளூர், தேனி, 
திண்டுக்கல், 
கோயம்புத்தூர், 
மதுரை, தூத்துக்குடி, 
கன்னியாகுமரி, மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் 
வேளாண்மை நடப்பது குறிப்பிடத்தக்கது.

வால் சிவப்பு நெல், ஒரு ஏக்கருக்கு சுமார் 900 கிலோ வரையில் (75 கிலோ பையில், 12 பைகள்) விளைச்சல் தரக்கூடியது.

வால் சிவப்பு நெல்லிலிருந்து கிடைக்கும் சிவப்பு அரிசி என்பது ஓர் அற்புதமான அரிய உணவு.

”பிரவுன் ரைஸ்” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வால் சிவப்பு அரிசியில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதிலுள்ள சத்துக்கள் நீக்கி பலமுறை தீட்டப்பட்ட பிறகு நமக்குக் கிடைக்கின்ற அரிசிதான் நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி.

வால் சிவப்பு அரிசியில் உள்ள சத்துக்கள்

வால் சிவப்பு அரிசியில் மாங்கனீஸ், மக்னீசியம், செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள் உள்ளது,.இதில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

வால் சிவப்பு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தானிய வகைகளில் வால் சிவப்பு அரிசியில் மட்டும்தான் வைட்டமின் ஈ உள்ளது.
வால் சிவப்பு அரிசியில்
நார்ச் சத்தும் மாவுச் சத்தும் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.
மேலும் இதில் உள்ள
நார்ச்சத்து புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் பாதுகாத்துக்கொள்ளும்.

வால் சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இதில்
உள்ள தாது உப்புக்கள்
கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் நன்கு வளர்ச்சி அடையும்.
வாய்ப் புண்கள் குணமாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளை அரிசியைவிட வால் சிவப்பு அரிசி சாப்பிடுவது பல மடங்கு நல்லது

வால் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம்போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும்.

நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும்.
இந்த வகையில் வால் சிவப்பு அரிசி என்பது ஓர் அற்புதமான அரிய உணவு.
இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும்
மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.

இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல் வால்  சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

கேன்சர், சர்க்கரைக் கோளாறு என்று எந்தப் பிரச்னையானாலும், முறையாக சிகிச்சை பெற்று, குணம் அடைந்து, மகிழ்ச்சியாக செல்லும் பலரும், அடுத்த ஓராண்டில், அதே பிரச்னைகளோடு திரும்பவும் வருகின்றனர். இது மிகவும் வருத்தம் அளிக்க கூடியதாக  இருக்கிறது.

மருந்துகளுக்கு கட்டுப்படும் நோய், மீண்டும் வந்து விடுகிறது.

உடல்
கோளாறுகளுக்கான
மூல காரணத்தைக் கண்டறிந்து,
சரி செய்வது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் .

சரியான உணவுப் பழக்கத்தால் மட்டுமே, நோயின்றி வாழ முடியும் என்று ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.

இயற்கை முறையில் பாரம்பரிய நெல் வகைகளைப் பயிர் செய்யும் விவசாயிகளை தொடர்ந்து சந்தித்ததில், அரிசி குறித்த அற்புதமான விஷயங்கள் கிடைத்துள்ளன.

பாரம்பரிய அரிசி குறித்து, நம்மில் பலருக்கும் தெரியாது; தமிழகத்தில், அதிக அளவில்
பயன்படுத்துவது, காவிரி டெல்டாவில் பயிராகும்,
மேம்படுத்தப்பட்ட, பொன்னி அரிசி.
இதில் எந்த பலனும் இல்லை.மருத்துவ  ஆலோசனைக்கு வரும் நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு, 300 எம்.ஜி., /டி.எல்., என்ற அளவிற்கு மேல் இருந்தால் மட்டுமே மருந்துகள் எடுத்துகள் கொள்ள வேண்டும்.
அதற்கு குறைவாக இருந்தால், குறிப்பிட்ட வகை பாராம்பரிய அரிசி, சமைக்காத காய்கறிகள், பழங்கள் என்று உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்தே, சரி செய்து விட முடியும்.

பொன்னி அரிசியில், கார்போஹைட்ரேட், 92 யூனிட், கிளைசிமிக் இன்டெக்ஸ்,
89 யூனிட்டுகளும் உள்ளன. தொடர்ந்து இதைச் சாப்பிட்டால், ரத்த சர்க்கரையின் அளவு இயல்பாகவே அதிகரிக்கும்.

பாரம்பரிய அரிசியில், கிளைசிமிக் இன்டெக்ஸ்,
56 யூனிட் மட்டுமே உள்ளது.

பாரம்பரிய அரிசியில், இயற்கையாக உள்ள சத்துகளும், குணங்களும் எத்தனை தலைமுறைகள்
ஆனாலும்மாறாமல் இருக்கும்


Health care

 



5 Tips to Deal With Arthritis Pain in Winter

Cold weather months can regularly emphasize the aggravation caused in joints. The unexpected drop in the barometric tension outcomes in the expanding of bones in the knees, making it more hard for the yearns to look for alleviation. Be that as it may, there are ways of managing the deplorable aggravation brought about by joint pain and gain some cure separated from the admission of meds and different solutions

Joint pain is an ailment that causes joint aggravation making an individual unfit to encounter normal developments around the joints. The joints that have bones and ligament get torn because of mileage with time. The breakdown of ligament tissue is generally normal in the declining long stretches of life. In any case, of late, insights have shown that the more youthful age having a place with the age gathering of 20 to 40 are additionally getting impacted by joint inflammation.

To remain sound, one should need to acknowledge the conditions and follow a daily practice. Following the 5 hints given underneath will assist the patients with adapting to the aggravation and languishing.








Remain Active: The chilly climate can prompt solidness, prompting the failure to challenge oneself for work out. This prompts the confusion of activities causing an expansion in joint agony. Assuming the aggravation doesn't endure for long, it is constantly encouraged to participate in active work to be adaptable and vigorous. Taking a crack at a rec center enrollment with a companion will assist with persuading one to remain dynamic.
Heat Up: The glow of blood helps in torment resilience. In the colder time of year, patients need to remain warm and look for benefits from heat treatment. Absorbing a heated water tub, wearing feet warmers and gloves can help in soothing the aggravation.
Get in shape: The tension on the knees and hips will in general be less assuming that the body needs to take less weight on itself. The less weight to be conveyed, the less weight on joints. A deficiency of 10 pounds can take 30-40 pounds of strain off the body while strolling, making it simpler to manage joint pain during winters.
Get a Massage: Research from The Journal of Alternative and Complementary Medicine in June 2015 has said that getting a back rub one time each week, for something like two months can help in loosening up the muscles around joint torment issues. Expanding the recurrence of treating our body with a rub down will be considerably more gainful during winters.
Hydration: Drinking a lot of water during winters is fundamental for all. Individuals frequently feel that remaining hydrated is just during the summers when winters require more dampness and moistness inside the body because of dry air. A warm cup of tea or a bowl of soup can likewise help similarly. Close by, having 8 glasses of water each day is the best solution for less agony vulnerable.
Considering a doctor when the aggravation endures for quite a while is vital. In the present day, there are a few clinical medicines and medical procedures accessible for patients experiencing joint inflammation. These medical procedures incorporate osteotomy, arthroscopy, synovectomy, and all out joint substitution. These, when treated by a decent muscular specialist can give help from agony and greater security to the joints.

Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom

 Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom Consuming garlic on an empty stomach is believed to offer numerous health be...