வியாழன், 24 பிப்ரவரி, 2022

ஆன்மீகம்




தியானத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்

தியானம் என்றால் என்ன?

நீங்கள் மனதாலோ அல்லது உடலாலும் எதுவும் செய்யாமல் எல்லா நடவடிக்கைகளும் முடிந்த நிலையில் நீங்கள் வெறுமனே, வெறும் உணர்வாய், சாட்சியாய் இருப்பதுதான் ,தியானம் எனப்படுவது. நீங்கள் அதற்காக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இவைகளை நன்றாக புரிந்து கொண்டாலே போதும்.

எப்பொழுது உங்களுக்கு ஓய்வு கிடைக்கிறதோ, அப்பொழுது உங்களது எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டு நீங்கள் வெறும் உள் உணர்வாய் இருங்கள். நினைப்பது அடுத்த ஒன்றின் மேல் கவனம் வைப்பது மற்றும் ஆழ்ந்த சிந்தனை அனைத்தும், அந்த நடவடிக்கைகளில் ஒன்றுதான். இவைகளை விடுத்து ஒரு சில வினாடிகள் ஆவது நீங்கள் உங்கள் உள் மையத்தில் இருந்தால், மிகவும் ஓய்வு தன்மையில் இருந்தால், அதுவே தியானம் ஆகிறது .அதை அடைவது எப்படி என்று புரிந்து கொண்டால் அதில் நீங்கள் விரும்பியவாறு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்க முடியும் உங்களால் ஏன் ,அதில் 24 மணி நேரமும் இருக்கவும் முடியும். 

நீங்கள் அதில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருக்க முடிந்தால், அந்த பாதையை சரியாக புரிந்து கொண்டால், நீங்கள் உங்கள் விருப்பப்படி அதிலிருந்து பிரக்ஞையோடு வெளியே வந்து, பல காரியங்களை செய்யலாம். ஆனால் உங்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது. இந்த நிலையில் இரண்டாவது நிலையாகும் முதலில்,  பிரக்ஞை

நிலையை, விழிப்பு நிலையை பூர்ணமாக அடைதல் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்து அதில் இருந்து வெளியே வந்து சில காரியங்களை எப்படி நடத்துவது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, தரையை சுத்தம் செய்யும் பொழுது, நீரில் குளிக்கும்போது நீங்கள் உங்கள் மனநிலையில் இருந்து நழுவாமல், இவைகளை செய்ய முடியும் பிரச்சனை உள்ள செயல்களில் அதே நிலையில் ஈடுபடமுடியும்.

                                       தொடரும்...


ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

தினம் ஒரு முத்திரை


 *தினம் ஒரு முத்திரை*


*ருத்ர முத்திரை*


சிவபெருமானுக்கு ருத்ரன் என்ற பெயருண்டு. சிவபெரு மானின்
கண்களிலிருந்து தோன்றியது ருத்ராக்ஷம். அக்ஷம் என்றால் கண்,
நல்ல ருத்திராக்ஷத்தை உரைத்துப் பார்த்தால் பசும்பொன்னின் மாற்று
இருக்குமென்று கூறுவார்கள். ருத்ராக்ஷம் அணிபவரை தீயவை
மற்றும் நோய் நொடிகள் அணுகா.
சிவபெருமானைப் பற்றிய மந்திரம் 'ருத்ரம்' எனப்படும். உடல் ஒரு
போக்கிலும் மனம் ஒரு போக்கிலும் செல்ல முடியாது. இரண்டு
குவிந்த நிலையில் இருக்க வேண்டும்.ட அவ்வாறு இல்லாவிட்டால்,
மன இறுக்கம், மனக் குழப்பம், மன அழுத்தம், தெளிவற்ற சிந்தனை,
முரண்பாடான செயல்பாடுகள் ஆகியவை ஏற்படும்.
நம் உடலில் சக்தி, வாயுக்கள், சக்கரங்கள் உள்ளன. பஞ்சபூதங்களும்
குவிந்திருந்தால் சமநிலையில் இருக்கும். இதனால், உடலும் மனமும்
சமநிலையில் இருக்கும்.
பூமி என்பது தாயாக உள்ளது. அதனால் அன்னை பூமி, தாய் நாடு
என்றெல்லாம் கூறுகிறோம். இந்தப் பூமி என்ற பஞ்சபூதம்
தூண்டப்பட்டால், உடல் சமநிலைப் படும்.
சோலார் நரம்புக் குவியல்கள்
சுவாதிஸ்டானம், மணிபூரகம் ஆகிய ஆதாரச் சக்கரங்களுடன் இந்த

நரம்புக் குவியல்கள் இணைந்துள்ளன. நமது வயிற்றுப்ட பகுதியில்
உள்ளே இருக்கும் இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், கணையம்,ட
சிறுநீரகங்கள் ஆகிய முக்கிய உறுப்புகள் இந்த நரம்புக் குவியலின்
கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. இந்த சுவாதிஸ்டானம்,
மணிபூரகச் சக்கரம் இரண்டும் சரிவரச் செயல்படா விட்டால், நரம்பு
கள் பாதிக்கப்பட்டு உள் உறுப்புகள் செயலிழந்துபோகும் வாய்ப்பு
உள்ளது.இந்த ருத்ர முத்திரையைச் செய்யும்போது சோலார் நரம்புக் குவியல்கள்
மற்றும் அதை இயக்கும் மணிபூரகச் சக்கரம் இரண்டும் தூண்டிவிடப்
படுகின்றன.
*செய்முறை*
கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல் ஆகிய மூன்று
விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.
நடு விரலும் சுண்டு விரலும் நேராக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில்
இரண்டு கைகளிலும் செய்யலாம்.
இந்த முத்திரையை பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து
செய்யலாம். இரண்டு கைகளிலும் ஒரே நேரம் ஐந்து முதல் பத்து
நிமிடங்கள் செய்யலாம்.

*பலன்கள்*

1. ரத்த ஓட்டம் சீராகும்.

2. தூய சிந்தனைகள் ஏற்படும்.

3. கண் பார்வைக் குறைபாடு குணமாகும்.

4. சுவாசம் சீர்படும்.

5. இதய வால்வில் உள்ள அடைப்புகள் நீங்கும்.

6. கவனச் சிதறல் ஏற்படாது.

7. பஞ்சபூதங்கள் அனைத்தும் உறுதியாகி சமப்படும்.

8. மண்ணீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் நன்கு செயல்படும்.

9. உயிர் சக்தி அதிகரிக்கும்.

10. தலைவலி, தலைச் சுற்றல் நீங்கும்.

11, ஜீரண சக்தி ஏற்படும்.

12. குடல் இறக்கம், மூலம், கர்ப்பப்பை கோளாறுகள் அகலும்.


சனி, 19 பிப்ரவரி, 2022

அன்பின் வழி

 ஆன்மீகம்- குரு


ஆன்மீகம் எல்லோருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் குழப்பத்தை தவிர்க்க, ஒருவன் தான் தேர்ந்தெடுத்த ஆன்மீகப் பாதையை முழுமையாக மதிக்க வேண்டும். உதாரணத்திற்காக, உணவை எடுத்துக்கொள்ளுங்கள் , பல நாடுகளில் அதன் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப உணவு வகை வெவ்வேறாக இருந்தாலும் அதனை உண்ணும் மக்களுக்கு ஒரே இலக்கு உயிர் வாழ்வதற்கும், வயிற்றின் பசியை பூர்த்தி செய்யவும் உணவு தேவையாகும். இதுபோலவே ஆன்மீகத்தை பலவகைகளில் பின்பற்றலாம். ஆனால் ஆன்மீகத்தின் பாதையில் செல்லும் ஒவ்வொருவருக்கும் முடிவான இலக்கு ஒன்றே ஆகும். கடவுளை அடைய, சில பூஜைகளை செய்ய விரும்புவார்கள். சிலர் பக்தி பாடல்களை (பஜனைகளை) விரும்புவார்கள். சிலருக்கு யோகா, சிலருக்கு தியானம் இவற்றில் எந்தப் பாதை சரியானது அல்லது இவற்றில் எது மிகத் தவறானது என்று ஒருவன் கேட்கலாம். எல்லா பாதைகளும் சரியானதே. உன்னுடைய மனது எதை விரும்புகிறதோ, அந்தப் பாதையின் வழியில் செல். சில நேரங்களில், பலர் தங்களுடைய குருவிடம் சென்று அவர் காண்பிக்கும் பாதையை பின்பற்றுவர்.
ஆனால் ,வேறொரு குரு கிடைத்து விட்டால், முதல் குருவை விட்டு விட்டு அவரிடம் செல்வார்கள். குருவை அடிக்கடி மாற்றுவதால் பல குழப்பங்கள் நேர வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் எந்த வகையிலும் முன்னேற்றம் காண முடியாது. மனதில் சலனம் ஏற்படுகிறது. ஒரு குருவிடம் இருந்து வேறு ஒரு குருவிடம் தாவக்கூடாது. மற்றும் ஒரு குருவோடு மற்றொரு குருவை ஒப்பிடக்கூடாது. மற்றொரு குரு வந்தால் அவரிடமிருந்து ஆசி பெறுங்கள்.அவருடைய போதனைகளை உங்களுடைய குரு கூறுவது போல நினைத்து கேளுங்கள். அவரிடம் உங்களுடைய குருவை காண வேண்டும். இவ்வாறு செய்தால் குழப்பம் நிலவாது. உங்கள் குருவை மற்ற குருவில் பார்த்தால் அவருடைய போதனைகளையும் சரியான வழியில் எடுத்து, ஆன்மீகத்தின் வழியில் செல்ல முடியும்.
இவ்வுலகில் அனைத்து குருவும் நல்லவர்கள்.எந்தப் பாதையிலும் தவறில்லை. எல்லா குருக்களும் கல்கி அவதாரமாக (ஒரு தெய்வீக சக்தி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்து மனித உருவில் வாழ்கிறது) வந்து வாழ்க்கையின் உண்மைகளையும், கொள்கைகளையும் கற்றுக்கொடுக்க வந்துள்ளனர்.மகான்களின் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும்,அனைத்து பாதைகளும் ஒரே இலக்கை போய் எட்டுகிறது -"கடவுள்" ஆன்மீகத்தில் தேர்ந்தெடுக்கும் பாதையில் செல்லவேண்டும். பக்தியை தவறாக உபயோகிக்க கூடாது.
மற்ற குருக்களைப் பற்றி தவறாக பேசக்கூடாது. ஒவ்வொரு குருவும் பிரத்தியேகமானவர்.நாம் வழிபடும் கடவுள் குருவின் வடிவத்தில் வருகிறார். ஆகையால், குருவை பற்றி அவதூறாக பேசினால் கடவுளை அவதூராக பேசுவதற்கு ஒப்பாகும். ஆன்மீகத்தின் பாதையில் அமைதிக்காகவும், சந்தோஷத்திற்காக செல்கிறோம். பல குருக்களையும் கடவுளின் பல்வேறு வடிவங்களாக பார்க்க வேண்டும். நன்மை வெவ்வேறு வழிகளில் அவர்கள் வழி நடத்தினாலும் ஒரே இலக்கை தான் வந்தடையும. மின்சார விளக்கு பலவிதமான சக்திகளில் வரும். ஆனால் அதில் பயன்படுத்தும் மின்சாரம் எல்லாவற்றிலும் ஒரே விதமாக இருக்கும்.
     எல்லோரும் தான் விருப்பத்திற்கு ஏற்ப குருவை தேர்ந்தெடுத்து அவரது போதனைகளை பின்பற்ற வேண்டும். நீ விரும்பிய இந்தப் பாதையை கடைசிவரை பின்பற்றி வாழவேண்டும். உன்னுடைய நண்பர்கள் கூறுவதை கேட்காமல், உன் மனதில் ஒலிக்கும் குரலை கேட்டு அதன்படி நடந்து உனது குருவின் பாதையில் செல்ல வேண்டும். அப்போதுதான் ஆன்மீகத்தின் பாதையில் முன்னேற முடியும். 
எல்லோரும் தான் விரும்பிய ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து, இறுதிவரை அதனைப் பின்பற்றி, கடவுளாகிய இலக்கை அடைய குருவின் அருளை பெற வேண்டும்.
          🙏நன்றி நன்றி நன்றி🙏

மௌனம் 2





நல்லவை நாற்பது தொடர்ச்சி

21. அப்புறம் இல்லாமல் சொல்லும் விஷயங்கள் இருப்பதாகத் தான் இருக்கும். உதாரணம் காட்டி சொல்பவைகள் உண்மையாக இருக்கும். உண்மை கேட்பவர்கள் மனதில் பதிந்துவிடும்.

22. திக்கற்ற முதியோரை காத்திடுங்கள். அதுவே முக்தி பெற வழி என்று நம்பிவிடுங்கள்.

23. உயிரை விட்ட உடனே உடலைச் சுட்டெரித்து விடுவார்கள் சுற்றத்தார்.
ஆகவே இருக்கும் வரை இறைவனை நினைத்துக் கொண்டே இருங்கள்.

24. தாய் சொல்லித்தான் தந்தையை அறிகிறோம். குரு காட்டித்தான் தெய்வத்தை காண முடியும். ஆகவே குருவை நாடுங்கள்.

25. வாழ்க்கையை சாசுவதம் என்றெணணி,பசித்தவருக்கு ஒரு பிடி அன்னம் கூட அளிக்காமல், எமன் வரும்பொழுது வருந்தி என்ன பயன்?

26. செல்வம்  வரும் பொழுது நிதானமாய், அடக்கத்துடன் நடந்து, முடிந்த வரை இல்லாதவருக்கு உதவுங்கள். துன்பம் வரும்போது இறைவனிடம் சரண் அடையுங்கள்.

27. மாயையான உலகில், இருப்பது பொய், போவது மெய் என்றெண்ணி, ஒருவருக்கும் தீங்கு எண்ணாதீர்கள்.

28. அன்பினால் தர்மம் பிறக்கிறது. தர்மத்தினால் தியாகம் பிறக்கிறது. அன்பும், சேவையும் தான் மனித குலத்தின் உயிர்நாடி.

29. இல்லாதவர்களுக்கு உதவி செய்வதுதான், நீங்கள் இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம் ஆகும்.

30. மனிதன் பற்றுகின்ற பொருள்களெல்லாம் அவனைப் பற்றிக் கொள்ளும் . பற்றை விட்டுவிடுங்கள். பற்றியவை பற்று அற்று போய்விடும்.

31. ஏளனம் செய்வது எளிது. ஆனால் ஏளனம் என்றும் ஏளனம் செய்தவரையே ஏளனப்படுத்தும். ஆகவே நாக்கிற்கு சிரமம் கொடுக்காதீர்கள்.

32. அன்பை கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர் மீது அன்பு செலுத்தினால் தான் வாழ்வை கற்றுக்கொள்ள முடியும்.

33. அதிகம் பேசுவதை தவிர்த்து விடுங்கள். ஆயிரம் சொற்கள் பேசுவதைவிட ஒன்றே ஒன்று உண்மைக்காக பேசுவது சிறந்தது.

34.காலச் சக்கரத்தின் அச்சு தான் கடவுள். வெளி விளிம்பில் இருந்து அச்சை நோக்கி நகருங்கள். காலம் உங்களை சுற்றி சுழற்றும்.அப்போது நீங்கள் காலத்தோடு சேர்ந்து சுழல மாட்டீர்கள்.

35. இளமையின் வேகத்தில் இன்றுஆட்டம் போடுபவர்கள், நாளை முதுமையில் தோல் சுருங்கி அழ போவதை மறந்து விடுகிறார்கள். ஆகவே எல்லா நிலைகளிலும் அமைதியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள்.

36. கடவுளிடம் சங்கமமாகும் வாழ்க்கை வேறு வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆகவே கடவுளோடு சங்கமமாகும் வழியை தேடுங்கள்.

37. தன்னிடம் இருப்பதை தவறாகப் பயன்படுத்துபவன் ஏழை. அதை சரியாக பயன்படுத்த பவனே செல்வந்தன்.

38. புகழைப் பெறுவதிலும், கொடுப்பதிலும் எச்சரிக்கை தேவை. தகுதியும், உண்மையும் இருந்தாலும் கூட புகழின் வார்த்தைகளில் செவிடாகவும் ,ஊமையாகவும் இருப்பது நல்லது. ஏனெனில் அது அகங்காரத்தில் வழிவகுத்துவிடும்.
            
             🙏  நன்றி நன்றி நன்றி🙏

வியாழன், 17 பிப்ரவரி, 2022

மௌனம் 1

  

மகா அவதார் பாபாஜி

நல்லவை நாற்பது

1. மௌனம் இறைவனின் மொழி. பணிவு, அமைதி, மவுனம் ஞானத்தின் அறிகுறிகள். ஆகவேதான் ஞானிகள் அதிகம் பேசுவதில்லை.

2. எது வந்தாலும் அதை ஆண்டவனின் விருப்பம் என ஏற்றுக் கொள்க. எது சென்றாலும் அதுவும் ஆண்டவனின் விருப்பமே என ஏற்றுக் கொள்க. எதையும் ஒன்றாக என்னும் சமநிலை பக்குவம் வந்து விட்டால் எந்த கஷ்டமும் நம்மை பாதிக்காது.

3." நான்" என்ற அகங்காரத்தில் இருந்து நீங்கள் விடுபட்டு விட்டால் உங்கள் மனம் தூய்மை அடைகிறது. அதன் மூலம் மேலான மெய்யறிவை இறை உணர்வை உணருவதற்கு தயாராகிறார்கள்.

4. தோல்வி ஒவ்வொன்றும் வெற்றி படியாகவும் அதேபோல் நாம் செய்யும் தவறுகளும் வாழ்க்கையை திருத்திக்கொள்ளும் படிகட்டாகும்.

5. தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் அன்று நடந்த நிகழ்ச்சிகளை நினைத்துப் பாருங்கள். தவறு செய்திருந்தால் ஆண்டவனிடம் மன்னிப்பு கேளுங்கள். நல்லவை செய்திருந்தால் அதன் பலனை ஆண்டவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள். இது உங்களை நீங்களே ஆத்ம பரிசோதனை செய்வதாகும்.

6. உண்மையான அன்பு என்பது, கொடுப்பது மட்டுமே. அங்கே வியாபாரமோ, பரிமாற்றமோ கிடையாது.

7. தவறு செய்யாத மனிதன் இல்லை. உணராதவன் மனிதனே இல்லை.

8. தியானம் செய்யுங்கள். அது சீக்கிரமே உங்களை எல்லாவிதமான துக்கத்தில் இருந்தும் விடுபட வைக்கும்.

9. மலைகளில் மலைவாழ் மக்கள் பலர் வாழ்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் கடவுள் தரிசனம் கிட்டி விட்டதா? என்றால் இல்லை. ஆகவே, ஞானத்தை அசைவற்ற மழையிடம் இருந்து தெரிந்து கொள்வதை விட ஓர் ஆத்ம ஞானம் இருந்து அதாவது ஒரு குருவிடமிருந்து தெரிந்துகொள்வது தான் மிகவும் நல்லது.

10. சதையும் எலும்பும் கூடிய கட்டான உடல் தான் நீ என்று எண்ணிவிடாதே அது ஒரு துன்பக் கூடு தவிர வேறன்று.

11. தன்னை அறிந்தவன் மரணத்தையும் அறிகிறான். அவன் கட்டளையிட்டால் தான் மரணம் அவனிடம் நெருங்க முடியும்.

12. நம்பிக்கையாலும், பக்தியாலும் மட்டுமே தெய்வீகக் காட்சிகளைக் காணும் நிலை கிடைக்கும்.

13. மனம் சஞ்சலப்பட்டு அலைமோதும் வரையில் அதில் ஆத்மாவின் தெளிவான பிம்பத்தை காண முடியாது. ஆகவே அமைதியை நாடுங்கள்.

14. அகத்தில் இருக்கும் ஆண்டவனை அறிந்தால் தான் அவரை புறத்திலும் காண முடியும்.

15. மனம் சுத்தமாக இருந்தால் அதை இறைவன், தான் குடியிருக்கும் கோயிலாக ஏற்றுக் கொள்கிறான்.

16. இன்பம் வரும்போது அதனால் கிடைக்கும் பலன்களை ஆண்டவனுக்கு அர்ப்பணித்து விட்டால், துன்பம் வரும்போது அந்த பாரத்தை அவனே தாங்கிக் கொள்வான்.

17. இறந்த பின்னே எதுவுமே கூட வராது. நாம் செய்த புண்ணியம் பாவம் மட்டுமே கூட வரும்.

18. வாழ்க்கையில் வளர்ச்சி வரும்பொழுது அடக்கமும் வளர வேண்டும். இல்லையெனில் தூக்கி வைத்த பேசியவர்கள் எல்லாம், சிறு சருக்கம் வந்தாலும் கீழே தூக்கிப் போட்டு விடுவார்கள்.

19. சொந்தமும் பந்தமும் செல்வமோ எதுவுமே சாசுவதம் கிடையாது. இறைவனின் திருவடியே சாசுவதம்.

20. பிறவாமை வேண்டும் ஒருவேளை மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும் என்று ஈசனிடம் வேண்டுங்கள்

                                          தொடரும் ...            


Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom

 Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom Consuming garlic on an empty stomach is believed to offer numerous health be...