ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

எண்ணங்கள்


எண்ணங்கள்.

1., நம் இயல்புக்கு ஏற்ப, சூழ்நிலைக்கு தகுந்த எண்ணங்கள் நம்முள் ஏற்பட்டே தீரும்.

2. அந்த எண்ணங்கள் வந்து சென்ற பிறகு தான் நமக்கு வந்துள்ளதாக எண்ணுகிறோம். நாம் உணரும் எந்த எண்ணமும் கடந்து சென்று விட்ட எண்ணமே.

3. நம்மை கடந்து சென்று விட்ட எண்ணத்தை அது வரக்கூடாது, இப்படி இருக்க வேண்டும் என நிர்வாகம் பண்ணுவது வீண்வேலை .

4. பல்வேறு எண்ணங்கள் ஏற்படுவது இயல்பு. அதில் புற செயலுக்கு எது தேவையோ, அதை மட்டுமே சிந்தித்து செயல் ஆற்றுங்கள்

5.  எண்ணம் Thought என்பது வேறு
சிந்தனை Thinking என்பது வேறு.

தாமாக தோன்றும் எண்ணத்தை (Thought), நாமாக தான் அதன் மீது எறி சவாரி செய்து சிந்தனையாக (Thinking) ஆக மாற்றி விடுகிறோம்.

எண்ணத்தை Thought ஐ, சிந்தனை யாக (Thinking) ஆக மாற்றுவது நாம் தான்.

உங்களை அறியாமல் ஏற்பட்டால் அது எண்ணம். நீங்கள் அறியாமல் இருக்கும் வரை அது எண்ணம்.

எப்போது உங்களுக்கு தெரிகிறதோ அப்போது அது Thinking. அப்போது அதை விட்டு விடுங்கள்.Thinking ஐ தான் நம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

எண்ணத்தை பிடித்து தொங்கமல் இருக்க நீங்கள் செயலில் கவனம் செலுத்துங்கள்.
செயலில் கவனம் செலுத்தும் போது செயலுக்கு உதவியாக ஏற்ற  எண்ணங்களே ஏற்படும். செயலில் கவனம் தவறும் போதே வேறு எதோ எண்ணத்தை பிடித்து தொங்கி கொண்டு இருப்போம்.

இயல்பான அழகு

 


அழகு


இயல்பாய் இருப்பது தான் அழகு . ஈர்ப்பு .

குழந்தைகள் இயல்பாய் சிரிக்கும் போதும் நடந்து கொள்ளும்போதும் அழகுதான் . அதன் இயல்பான அழுகையும் அழகு தான் . 


வேட்டையாடும் சிங்கமும் 

பயந்து ஒடும் மானும் 

படம் எடுத்து ஆடும் பாம்பும் அதன் இயல்பில் அழகாய் இருக்கும் . 



இயல்பில் இருப்பது தான் அழகு . 

இயல்பில் இருப்பது தான் ஈர்ப்பு 

இயல்பில் இருப்பது தான் ஒழுக்கம் 

இயல்பில் இருப்பது தான் சுதந்திரம் 

இயல்பில் இருத்தல் விடுதலை

இயல்பில் இருப்பது தான் சும்மா இருத்தல் . 

இயல்பில் இருப்பது நிகழ் காலத்தில் இருப்பது . 

இயல்பில் இருப்பது தான் சாட்சி தன்மையில் இருத்தல்.

இயல்பொடு முரண்பட கூடாது என்ற புரிதலே ஞானம் . இயல்பொடு ஒத்து போதலே சரணாகதி. 

 

இயல்பில் இருக்க முயற்சி/பயிற்சிகள் எதும் தேவை இல்லை . 

முயற்சிகள் அனைத்தும் இயல்புக்கு முரணானது. 


அக முயற்சிகள் அற்ற நிலையில் நாம் இயல்பில் தான் இருக்கிறோம். 


இயல்பு அனைவருக்கும் ஒன்றானது அல்ல . ஒவ்வொருவரின் இயல்பும் வேறுபட்டு இருக்கும் . 

இயல்பில் செயல்படும் போது நாம் மெய் பொருளின் இயக்காமாய் இருப்போம் . 


இயல்பில் இருக்கும்போது நம் ஆற்றல் 100% வெளிப்படும் . 


இயல்பில் total mind செயல்பாட்டில் இருக்கும் . Concious mind முக்கியத்துவம் இன்றி இருக்கும் .இயல்பில் இருக்கும் போது Concious mind ம் total mind உடன் இணைந்து நிலையில் செயல்படும் .


இயல்பில் இருக்கும் போது கர்மாக்கள் தொடர்வது இல்லை .

Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom

 Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom Consuming garlic on an empty stomach is believed to offer numerous health be...